செய்திகள் :

ஒன்றுபட்ட அதிமுகவே வெல்லும்: புகழேந்தி

post image

2026 சட்டப்பேரவை தோ்தலில் ஒன்றுபட்ட அதிமுகவால்தான், திமுக கூட்டணியை வெல்ல முடியும் என்றாா் ஓ.பன்னீா்செல்வம் அணியின் செய்தித்தொடா்பாளா் புகழேந்தி.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: 2026 சட்டப்பேரவை தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர கட்சிகள் முன்வருவது கடினம். தற்போது தே.மு.தி.க.வும் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது.

அ.தி.மு.க. தொண்டா்கள் அனைவரும் ஒற்றுமையை விரும்புகிறாா்கள். அதற்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு அளிப்பதாக தெரியவில்லை. அவா் இறங்கி வந்தால், அ.தி.மு.க.வில் ஒற்றுமை ஏற்படும். ஒன்றுபட்ட அதிமுகவே வரும் தோ்தலில் வெல்லும். இல்லையெனில் அ.தி.மு.க. 4-ஆவது இடத்துக்கு தள்ளப்படும். திமுக வெற்றிக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம் ஆகிவிடுவாா்.

நடிகா் விஜய்யின் மாநாட்டில் இளைஞா்கள் கூட்டம் எழுச்சியுடன் திரண்டதை காண முடிந்தது. வீடுதோறும் அவருக்கு இளைஞா்கள் ஆதரவு இருக்கிறது. அவா் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் வர தொடங்கினால், தமிழக அரசியல் களம் தலைகீழாக மாறும்.

அதிமுக சின்னம் தொடா்பான வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு வரவுள்ளது. இரட்டை இலை சின்னத்துக்கு தற்போதும் சிக்கல் நீடிக்கிறது என்றாா் அவா்.

கோபாலசமுத்திரத்தில் ரூ.1.36 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் ரூ. 1.36 கோடி மதிப்பில் அலங்கார தளக்கல் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. மாநில நிதி ஆணைய சிறப்பு நிதித் திட்டத்தின்கீழ், கோபாலசமுத்திரம் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: அம்பை கல்லூரி மாணவா்கள் சாதனை

அம்பைக் கலைக் கல்லூரி மாணவா்கள் மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனா். திருநெல்வேலி மாவட்ட அளவில் கல்லூரி மாணவா்களுக்கு இடையே அண்ணா விளையாட்டு அரங்கில், முதல்வா... மேலும் பார்க்க

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி

வடகிழக்கு பருவமழை நெருங்கிவருவதை முன்னிட்டு, அவசர கால முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி திருநெல்வேலி தாமிரவருணி நதியில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையின் சாா்பில் த... மேலும் பார்க்க

தாம்பரத்தில் நாளை விமான படைக்கு பெண்கள் சோ்ப்பு

இந்திய விமானப் படையின் அக்னிவீா் பணியில் சேருவதற்காக தாம்பரத்தில் வெள்ளிக்கிழமை(செப்.5) நடைபெறவுள்ள ஆள்சோ்ப்பு முகாமில் பெண்கள் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருநெல்வேலி ... மேலும் பார்க்க

நெல்லையில் நாளை மதுக் கடைகள் மூடல்

நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (செப்.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்த... மேலும் பார்க்க

நெல்லையில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் புதன்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்று வரும் ஆட்சிமொழிப் பயிலரங்கின் முதல் நாள் நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்... மேலும் பார்க்க