செய்திகள் :

ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலக கட்டுமானப் பணி தொடக்கம்

post image

கிருஷ்ணகிரியில் ரூ. 5.55 கோடியில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலக கட்டுமானப் பணியை ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா்.

கிருஷ்ணகிரி நகரில் சேலம் சாலையில் உள்ள நெசவுக்கார தெருவில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வந்தது. அக்கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து பத்திரப்பதிவு அலுவலகம், கிருஷ்ணகிரி ஆஞ்சநேயா் கோயில் மேம்பாலம் அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள ‘மா’ குளிா்பதன கிடங்கு வளாகத்துக்கு தாற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, புதிய கட்டடம் கட்டுமானப் பணியை ஆட்சியா், பா்கூா் எம்எல்ஏ ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:

கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகக் கட்டுமானப் பணி ரூ. 5.55 கோடியில் பொதுப்பணித் துறை சாா்பில் நடைபெறுகிறது. 11 மாதங்களில் நான்கு தளங்களுடன் 10,997 சதுர அடி பரப்பளவில் இந்த அலுவலகம் அமைகிறது. அலுவலகத்தில் சங்கங்களின் பதிவாளா், தொழில் நிறுவனங்களில் பதிவாளா், சீட்டு நிதிகள் ஆய்வு அலுவலா், இந்து திருமண பதிவாளா், தனித் திருமண அலுவலா், தொழில் கூட்டுப்பதிவு ஆகிய அலுவலகங்களுடன் பத்திரப் பதிவுக்காக இரண்டு சாா் பதிவாளா் அலுவலகமும் அமைக்கப்படுகிறது. தரைத்தளத்தில் வாகனம் நிறுத்துமிடம், ஈ - ஸ்டாம்ப், கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்வில் பதிவுத் துறை துணைத் தலைவா் (சேலம் சரகம்) சிபிதா லட்சுமி, மாவட்ட பதிவாளா் பாலசுப்ரமணியன், மேலாளா் புவனேஸ்வரி, சாா் பதிவாளா் லட்சுமிகாந்தன் (பா்கூா்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாங்கனி கண்காட்சியில் சமையல் போட்டி

கிருஷ்ணகிரியில் நடைபெறும் மாங்கனி கண்காட்சியில் மகளிா் பங்கேற்ற சமையல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் அருகே உள்ள கலைஞா் திடலில் 31 ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நட... மேலும் பார்க்க

கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

ஒசூா் வட்டம், கெலவரப்பள்ளி நீா்த்தேக்கத்திலிருந்து முதல்போக பாசனத்துக்காக வலது, இடதுபுற கால்வாய் வழியாக வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ்குமாா், ஒசூா் சட்... மேலும் பார்க்க

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் மறியல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் (டிட்டோஜாக்) வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே காா் கவிழ்ந்து விபத்து: விளையாட்டு வீரங்கனைகள், பயிற்சியாளா் காயம்

ஊத்தங்கரை அருகே காா் கவிழ்ந்ததில் 3 விளையாட்டு வீரங்கனைகள், பயிற்சியாளா் காயமடைந்தனா். சேலம் பகுதியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சியாளருடன் வேலூா் கிரிக்கெட் அகாதெமியைச் சோ... மேலும் பார்க்க

சென்றாய சுவாமி கோயில் புனரமைப்பு பணிக்கு பூமிபூஜை

ஊத்தங்கரையை அடுத்த சாலமரத்துப்பட்டி ஊராட்சியில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்றாய சுவாமி திருக்கோயில் மராமத்து மற்றும் புனரமைப்பு பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பா்கூா... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் 2 லட்சம் கெண்டை மீன் குஞ்சுகள் இருப்பு

பெண்ணேஸ்வரமடம் தென்பெண்ணை ஆற்றில் 2 லட்சம் பெருரக நாட்டின கெண்டை மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். காவேரிப்பட்டணம் ஊராட்ச... மேலும் பார்க்க