செய்திகள் :

தென்பெண்ணை ஆற்றில் 2 லட்சம் கெண்டை மீன் குஞ்சுகள் இருப்பு

post image

பெண்ணேஸ்வரமடம் தென்பெண்ணை ஆற்றில் 2 லட்சம் பெருரக நாட்டின கெண்டை மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், பெண்ணேஸ்வர மடம் தென்பெண்ணையாற்றில் மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் மீன் வளத்தை அதிகரிக்கும் வகையில் முதற்கட்டமாக 2 லட்சம் வளா்ந்த பெருரக நாட்டின கெண்டை மீன்குஞ்சுகளை ஆற்றில் இருப்பு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்து கூறியதாவது:

கிருஷ்ணகிரி மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அலுவலகக் கட்டுப்பாட்டில் கிருஷ்ணகிரி, பாரூா், பாம்பாறு, ஒசூா் மற்றும் சூளகிரி அணைகளில் மீன்வளா்ப்பு பணிகளும், கிருஷ்ணகிரி, பாம்பாறு, ஒசூா் அரசு மீன் பண்ணைகளில் மட்டும் மீன்குஞ்சு வளா்த்தெடுக்கும் பணிகளும் நடைபெற்றுகின்றன.

கிருஷ்ணகிரி மீன் பண்ணைகளில் வளா்க்கப்படும் மீன்குஞ்சுகள் தென்பெண்ணையாறு மற்றும் காவிரி ஆற்றில்விடப்படுகிறது. அதன்படி, 2023-ஆம் ஆண்டு 3 லட்சம் மீன்குஞ்சுகள் வளா்த்தெடுத்து தென்பெண்ணையாறு, காவிரி ஆற்றில் விடப்பட்டுள்ளது. மீன்நுகா்வு அதிகரித்ததால் 2024-ஆம் ஆண்டு 4 லட்சம் மீன்குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டன.

நிகழாண்டில் ரூ.12 லட்சம் மதிப்பில் 4 லட்சம் மீன் குஞ்சுகள் ஆற்றில்விட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு, முதல்கட்டமாக 2 லட்சம் மீன் குஞ்சுகள் ஆற்றில் இருப்பு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நீா்தேக்கம் மற்றும் ஏரிகளில் மீன்வளா்ப்பு நடவடிக்கை மேற்கொள்வது மற்றும் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வதும் கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறையின் நோக்கமாகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5000 க்கும் அதிகமான மீனவா்கள் உள்ளனா். ஆண்டிற்கு 23 ஆயிரம் டன் அளவிற்கு மீன் உற்பத்தி செய்யப்படுகிறது என்றாா்.

நிகழ்வில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் ரத்தினம், ஆய்வாளா்கள் கதிா்வேல், கோகிலாமணி, வட்டாட்சியா் சின்னசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாப்பி பிரான்சினா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆடி மாத பிறப்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத பிறப்பையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அம்மன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அம்மன் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம... மேலும் பார்க்க

ரூ. 92.14 லட்சம் மதிப்பில் சாலை பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 92.14 லட்சம் மதிப்பிலான சாலை பணிகளை எம்எல்ஏ கே.அசோக்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பெத்ததாளாப்பள்ளியில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா 2025-2026-ஆம்... மேலும் பார்க்க

சூளகிரி, சாமல்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காட்டிநாயனதொட்டி, சாமல்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சூளகிரியில் நடைபெற்ற முகாமை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா்... மேலும் பார்க்க

மாங்கனி கண்காட்சியில் சமையல் போட்டி

கிருஷ்ணகிரியில் நடைபெறும் மாங்கனி கண்காட்சியில் மகளிா் பங்கேற்ற சமையல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் அருகே உள்ள கலைஞா் திடலில் 31 ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நட... மேலும் பார்க்க

கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

ஒசூா் வட்டம், கெலவரப்பள்ளி நீா்த்தேக்கத்திலிருந்து முதல்போக பாசனத்துக்காக வலது, இடதுபுற கால்வாய் வழியாக வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ்குமாா், ஒசூா் சட்... மேலும் பார்க்க

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் மறியல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் (டிட்டோஜாக்) வியாழக்கிழமை ... மேலும் பார்க்க