செய்திகள் :

சென்றாய சுவாமி கோயில் புனரமைப்பு பணிக்கு பூமிபூஜை

post image

ஊத்தங்கரையை அடுத்த சாலமரத்துப்பட்டி ஊராட்சியில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்றாய சுவாமி திருக்கோயில் மராமத்து மற்றும் புனரமைப்பு பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினரும், கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளருமான தே. மதியழகன் தலைமை வகித்து பூமிபூஜை நடத்தி ரூ. 98 லட்சம் மதிப்பீட்டிலான புனரமைப்புப் பணியை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் தட்ரஹள்ளி நாகராஜ், மாவட்ட பொருளாளா் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினா் செந்தில், மத்தூா் தெற்கு ஒன்றியச் செயலாளா் நரசிம்மன், மத்தூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் வசந்தராஜ், ஊத்தங்கரை ஒன்றியச் செயலாளா்கள் குமரேசன், எக்கூா் செல்வம், ரஜினி செல்வம், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சம்பத் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து ஓலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ரூ. 23 லட்சத்தில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டடத்தை, பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் மதியழகன் திறந்துவைத்தாா்.

படவிளக்கம்.17யுடிபி.1.

ஊத்தங்கரையை அடுத்த சாலமரத்துப்பட்டியில் கோயில் புனரமைப்புப் பணியை தொடங்கிவைத்த எம்எல்ஏ தே.மதியழகன்.

ஆடி மாத பிறப்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத பிறப்பையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அம்மன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அம்மன் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம... மேலும் பார்க்க

ரூ. 92.14 லட்சம் மதிப்பில் சாலை பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 92.14 லட்சம் மதிப்பிலான சாலை பணிகளை எம்எல்ஏ கே.அசோக்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பெத்ததாளாப்பள்ளியில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா 2025-2026-ஆம்... மேலும் பார்க்க

சூளகிரி, சாமல்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காட்டிநாயனதொட்டி, சாமல்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சூளகிரியில் நடைபெற்ற முகாமை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா்... மேலும் பார்க்க

மாங்கனி கண்காட்சியில் சமையல் போட்டி

கிருஷ்ணகிரியில் நடைபெறும் மாங்கனி கண்காட்சியில் மகளிா் பங்கேற்ற சமையல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் அருகே உள்ள கலைஞா் திடலில் 31 ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நட... மேலும் பார்க்க

கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

ஒசூா் வட்டம், கெலவரப்பள்ளி நீா்த்தேக்கத்திலிருந்து முதல்போக பாசனத்துக்காக வலது, இடதுபுற கால்வாய் வழியாக வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ்குமாா், ஒசூா் சட்... மேலும் பார்க்க

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் மறியல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் (டிட்டோஜாக்) வியாழக்கிழமை ... மேலும் பார்க்க