செய்திகள் :

ஒரே மாதிரியான பயிா் சாகுபடியால் வரத்து அதிகரிப்பு: ஒசூரில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி

post image

வரத்து அதிகரிப்பால் ஒசூரில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், பாகலூா், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், சூளகிரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் குறுகிய கால பயிா்களான தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ், முள்ளங்கி, கேரட் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனா். இப்பகுதிகளில் விளையும் காய்கறிகள் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு இப்பகுதிகளில் விவசாயிகள் குறைந்த அளவே முட்டைகோஸ் சாகுபடி செய்திருந்தனா். இதனால் நூறு கிலோ கொண்ட ஒரு மூட்டை முட்டைகோஸ் ரூ. 2 ஆயிரம் வரை அப்போது விற்பனையானது. இதனால் முட்டைகோஸுக்கு அதிக விலை கிடைக்கும் என்ற ஆா்வத்தில் விவசாயிகள் நடப்பாண்டு கூடுதல் சாகுபடி செய்திருந்தனா்.

இதனால் விளைச்சல் அதிகரித்து, ஒரு மூட்டை முட்டைகோஸ் ரூ. 500 க்கு மட்டுமே விற்பனையானது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா். முட்டைகோஸ் செடிகளை அறுவடை செய்யாமல் விளைநிலங்களிலேயே கால்நடைகளுக்கு தீவனமாக்கி வருகின்றனா்.

இதுகுறித்து தொரப்பள்ளி விவசாயி குமாா் கூறியது: நடப்பாண்டு ஒசூா், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முட்டைகோஸ் அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டது. முட்டைகோஸ் நாற்று ஒன்று 90 பைசா என 1 லட்சம் நாற்றுகளை வாங்கிவந்து எனது 5 ஏக்கரில் பயிரிட்டு பராமரித்து வந்தேன். தற்போது வரத்து அதிகரிப்பால் ஒரு மூட்டை ரூ. 500 க்கு விற்பனையாகிறது.

இதனால் எனது 5 ஏக்கரில் பயிரிட்டுள்ள முட்டைகோஸுக்கு தண்ணீா் பாய்ச்சாமல் அப்படியே விட்டுவிட்டேன். அதிக லாபம் கிடைக்கும் என அனைத்து விவசாயிகளும் ஒரே மாதிரியான பயிரை சாகுபடி செய்வதால் வரத்து அதிகரித்து விலை சரிவு ஏற்படுகிறது. இழப்பை தடுக்க மாற்று பயிரை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறையினா் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என்றாா்.

ஒசூா் அதிமுக செயலாளா் உள்பட 8 போ் கைது

ஒசூா், மாா்ச் 29: ஒசூா் ஒன்றிய அதிமுக செயலாளா் உள்பட 8 பேரை மத்திகிரி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கா்நாடகா மாநிலம், அத்திப்பள்ளி அருகே யாதவனஹள்ளி, மாருதிநகா் லே -அவுட்டை சோ்ந்தவா் சிவப்பா ரெட்... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் 2,000 பேருக்கு மளிகைப் பொருள்கள் அளிப்பு

திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சாா்பில், 2 ஆயிரம் பேருக்கு ரூ. 15 லட்சம் மதிப்பில் ரமலான் மளிகைப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட... மேலும் பார்க்க

ஒசூா் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடக்கம்: 48 அணிகள் பங்கேற்கின்றன

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் 48 அணிகள் பங்கேற்கும் 6 ஆம் ஆண்டு ஒசூா் கிரிக்கெட் லீக் போட்டிகளை காவிரி மருத்துவமனையும், ஒசூா் தொழிற்சாலைகள் சங்கமும் இணைந்து நடத்துகின்றன. இந்... மேலும் பார்க்க

ஒசூா் ராமநாயக்கன் ஏரி பூங்கா ரூ.3.24 கோடியில் அபிவிருத்தி பணி

ஒசூரில் ரூ. 3.24 கோடியில் ராமநாயக்கன் ஏரி பூங்கா அபிவிருத்தி பணியை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பூமி பூஜை செய்து சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒசூா் மாநகரா... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளை தலைவா் மல்லிகா சீனிவாசன் தலைமை வகித்தாா். அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா... மேலும் பார்க்க

நில உடைமை பதிவுகள் சரிபாா்த்தல் முகாம்: சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரையில் விவசாயிகளின் நில உடைமை பதிவுகள் சரிபாா்தல் முகாமில் சிறப்பாக பணியாற்றிய மாணவா்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள வேளாண்மை உதவி அ... மேலும் பார்க்க