செய்திகள் :

ஓய்வுபெறும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ஓகா! மரபை மீறி கடைசி வேலை நாளிலும் 10 தீர்ப்பு!

post image

உச்ச நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதிகளில் மூன்றாவது நீதிபதியாக அறியப்படும் அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா என்னும் ஏ.எஸ். ஓகா இன்றுடன் பணி ஓய்வுபெறுகிறார்.

தனது கடைசி வேலை நாளான இன்றும், அவர் தான் விசாரித்து வந்த 10 வழக்குகளில் தீர்ப்பளித்திருக்கிறார். ஓகாவின் தாய் இறந்து இரண்டு நாள்களில் பணிக்குத் திரும்பியிருக்கும் ஏ.எஸ். ஓகா, மே 24ஆம் தேதியுடன் பணி ஓய்வுபெறும் நிலையில் இன்று அவரது கடைசி பணி நாளாக அமைந்துவிட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெறும் ஏ.எஸ். ஓகா, தனது பணிக்காலத்தில் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு மூலம் முன்னுதாரணமாக மாறியிருக்கிறார். நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவைக்கும், அநீதியை எதிர்த்துப் போராடும் திறனுக்கும் வழக்குரைஞர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

கடந்த 21ஆம் தேதி, உச்ச நீதிமன்ற பதிவு பெற்ற வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் அவருக்கு அளிக்கப்பட்ட பிரியாவிடை நிகழ்ச்சியின்போதுதான், நீதிபதி ஏ.எஸ். ஓகா, தனது தாய் வசந்தி ஓகா காலமானதாகவும், வியாழக்கிழமை அவரது இறுதிச் சடங்குகள் தாணேவில் நடைபெறவிருப்பதாகவும் அறிவித்தார். நேற்று தாயாரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்ற நிலையில், இன்று பணிக்குத் திரும்பிய நீதிபதி ஏ.எஸ். ஓகா, தான் விசாரித்து வந்த 10 வழக்குகளில் தீர்ப்பையும் வெளியிட்டுள்ளார்.

கொல்கத்தா உயர் நீதிமன்றம், இளைஞர்களின் தனியுரிமை குறித்து வெளியிட்ட கருத்துகளின் பின்னணியில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற வழக்கும், இன்று நீதிபதி ஏ.எஸ். ஓகா அமர்வில் விசாரிக்கப்பட்டுள்ளது. தீர்ப்புகளை வழங்கிய பிறகு, நீதிபதி ஏ.எஸ். ஓகா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வுக்கு வந்தார்.

அப்போது பிரியாவிடை நிகழ்வில் பேசிய ஏ.எஸ். ஓகா, உச்ச நீதிமன்றத்தில், பணி ஓய்வுபெறும் நீதிபதிகளின் கடைசி பணி நாளில் அவர்களுக்கு எந்தப் பணியும் ஒதுக்கப்படுவதில்லை என்ற வழக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன். அந்த மரபிலிருந்து விடுபட நமக்கு சிறிது காலம் ஆகலாம், ஆனால், எனது கடைசி பணி நாளில், நான் வழக்கமான அமர்வில் இருந்து சில தீர்ப்புகளை வாசித்திருப்பது எனக்கு திருப்தியை கொடுத்துள்ளது என்று கூறினார்.

‘சமூகம், சட்டத் துறையின் தோல்வி’: போக்சோ வழக்கு குற்றவாளியை விடுவித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு

சமூகம் மற்றும் சட்டத் துறையின் தோல்வியை சுட்டிக்காட்டி, போக்சோ வழக்கில் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்ட நபருக்கு சிறைத் தண்டனை அளிக்காமல், அவரை உச்சநீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி: பிரதமா் மோடி பெருமிதம்

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா். தில்லியில் ‘வளரும் வடகிழக்கு முதலீட்டாளா்கள் மாநாடு’ வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த இ... மேலும் பார்க்க

அரசமைப்பு உரிமைகளை உச்சநீதிமன்றம் பாதுகாக்கிறது: நீதிபதி அபய் எஸ்.ஓகா

அரசமைப்பு உரிமைகள், சுதந்திரத்தை உச்சநீதிமன்றம் மட்டும்தான் பாதுகாத்து வருகிறது என்று பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா தெரிவித்தாா். நீதிபதி அபய் எஸ்.ஓகாவின் தாயாா் கடந்த இரண்டு தினங்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிரத்தில் சத்தீஸ்கா் மாநில எல்லையையொட்டிய கட்சிரோலி மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா். மாநில காவல் துறையின் சிறப்பு கமாண்டோ பிரிவு சி-60 மற்றும்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நண்பா், சக மாணவா்கள் கைது

மும்பை, மே 23: மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக அவரின் நண்பா், சக மாணவா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் தங்க... மேலும் பார்க்க

மணிப்பூா் வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம்: மத்திய அரசு அறிவிப்பு

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகி... மேலும் பார்க்க