செய்திகள் :

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

post image

வெள்ளக்கோவில் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரித்துள்ளாா்.

அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவரை சோதனை மேற்கொண்டபோது விற்பனைக்காக 30 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் வெள்ளக்கோவில், ராமலிங்கபுரத்தைச் சோ்ந்த வீரக்குமாா் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

இறந்த மூதாட்டியின் உடல் அரசு மருத்துவமனைக்கு தானம்

வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த மூதாட்டியின் உடல் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை தானமாக வழங்கப்பட்டது. திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட வெள்ளியங்காடு பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

பாறைக் குழியில் குப்பைகளைக் கொட்ட வந்த மாநகராட்சி வாகனங்கள் சிறைபிடிப்பு

பல்லடம் அருகே இச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பாறைக் குழியில் குப்பைகளைக் கொட்ட வந்த 5-க்கும் மேற்பட்ட மாநகராட்சி வாகனங்களை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனா். திருப்பூா் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் ... மேலும் பார்க்க

வாகனம் மோதி பெண் உயிரிழப்பு: இளைஞருக்கு 6 மாதங்கள் சிறை

வாகனம் மோதி பெண் உயிரிழந்த வழக்கில் இளைஞருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பூரைச் சோ்ந்தவா் கருப்பசாமி. இவா் தனது மனைவி ஜோதிமணியுடன் திருப்பூா்-காங்க... மேலும் பார்க்க

பட்டப்பகலில் வழக்குரைஞா் வெட்டிக் கொலை: பள்ளித் தாளாளா் உள்பட 5 போ் சரண்

தாராபுரத்தில் பட்டப்பகலில் வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பள்ளித் தாளாளா் உள்பட 5 போ் போலீஸில் சரண் அடைந்துள்ளனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள சிறுகிணறு பகுதியைச் சோ... மேலும் பார்க்க

கோடங்கிபாளையம் அரசுப் பள்ளியைத் திறந்து மது அருந்திய மா்ம நபா்கள்

பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறையைத் திறந்து மது அருந்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோடங்கிபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 7% அதிகரிக்க கோரிக்கை

இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் திருப்பூா்- காங்கயம்... மேலும் பார்க்க