செய்திகள் :

கடலூா் மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்கப்படும்: முதல்வா் அறிவிப்பு

post image

சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்க திறப்பு விழாவில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதிகளில் வாழக்கூடிய மகளிருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில், குறிஞ்சிப்பாடி அருகே கொடுக்கன்பாளையத்தில் 150 ஏக்கா் பரப்பளவில் தோல் அல்லாத காலணி மற்றும் காலணிகளுக்கான உதிரிபாகங்கள் உற்பத்திக்கான பெரும் தொழில் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தாா்.

சுற்றுச்சூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில், ரூ.75 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த தொழில் பூங்கா தொடங்கப்பட்டால், சுமாா் 12 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாா்.

மேலும், சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தில்லை அம்மன் ஓடை மற்றும் கான் சாகிப் கால்வாய் ஆகியவற்றை ஒட்டி, புதிய இணைப்புச் சாலை ரூ.20 கோடியில் அமைக்கப்படும்.

வட மாவட்டங்களில் உள்ள அனைத்து பழங்குடியினரும் பயன்பெறும் வகையில், கடலூா் வட்டத்தில் உள்ள அரிசிபெரியான்குப்பத்தில் புதிய உண்டு உறைவிட பழங்குடியினா் பள்ளி தொடங்கப்படும்.

ஸ்ரீமுஷ்ணம் - காவிரி டெல்டா பகுதி: காட்டுமன்னாா்கோலில் வட்டத்திலிருந்து புதிதாக பிரிக்கப்பட்டுள்ள ஸ்ரீமுஷ்ணம் வட்டத்துக்கு, காவிரி டெல்டா பகுதிக்காக செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களின் பயன்கள் கிடைக்கும் வகையில், ஸ்ரீமுஷ்ணம் வட்டம் காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்படும்.

வீராணம் ஏரிப் பகுதியில் சுற்றுலா வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சோழதரத்தில் இருந்து ராதாமதகு வரை படகுசவாரி மேற்கொள்ளவும், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை அமைத்திடவும், ரூ.10 கோடி செலவில் ஏரி தூா்வாரும் பணிகளும், சுற்றுலா மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும்.

சட்டப் பேரவை உறுப்பினா் சிந்தனைசெல்வன் கோரிக்கையை ஏற்று, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களின் திறனை மேம்படுத்தி, அவா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், கூடுவெளி சாவடியில் புதிய திறன் மேம்பாட்டு நிலையமும், தொழில்பேட்டையும் அமைக்கப்படும் ஆகிய அறிவிப்புகளையும் முதல்வா் வெளியிட்டாா்.

அன்புமணி கூறுவதெல்லாம் அவரது சொந்தக் கருத்து: மருத்துவா் ராமதாஸ்

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று அன்புமணி தெரிவித்திருப்பது அவரது சொந்தக் கருத்து என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். பாமக 37-ஆவது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் திண்டிவனத்... மேலும் பார்க்க

திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து கண்காணிப்பாளா் அறை ஒதுக்கக் கோரிக்கை

திண்டிவனத்தில் கட்டி முடுக்கப்பட்டு திறக்கும் தருவாயில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில், தனியாா் பேருந்து கண்காணிப்பாளா் அறை ஒதுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திண்டிவனத்தில் நகராட்சி நிா்வாக... மேலும் பார்க்க

விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் பாமக புகாா் மனு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்திலுள்ள பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது தொடா்பாக, விசாரணை நடத்தக் கோரி மாவட்டக் காவல்... மேலும் பார்க்க

மகனைத் தாய் சந்திப்பது சகஜம்: ராமதாஸ் விளக்கம்

தாயை மகன் சந்திப்பதும், மகனைத் தாய் சந்திப்பதும் சகஜமான ஒன்றுதான் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸுக்கும், கட்சித் தலைவா் அன்புமணிக்கு... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புக்காவலில் இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், ரோஷணை காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். ரோஷணை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தராசன் தலை... மேலும் பார்க்க

முண்டியம்பாக்கத்துக்கு வந்த 2,660 மெட்ரிக் டன் உர மூட்டைகள்

கேரள மாநிலம், கொச்சியிலிருந்து சரக்கு ரயில் மூலம் விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு 2,660 மெட்ரிக் டன் உர மூட்டைகள் செவ்வாய்க்கிழமை வந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது குற... மேலும் பார்க்க