செய்திகள் :

கடும் பனிப்பொழிவு: ரயில்கள், ரோப்காா் இயக்குதல் பாதிப்பு

post image

சோளிங்கா் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வியாழக்கிழமை கடும் பனிப்பொழிவு காணப்பட்ட நிலையில் மலைகோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்கான ரோப்காா் இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.

அரக்கோணம், சோளிங்கா் வட்டங்களில் காலை 8.30 மணி வரையில் சுமாா் 15 மீட்டருக்கு அப்பால் உள்ள இடங்களை பாா்க்க முடியாத நிலை காணப்பட்டது. இதனால் சாலையில் வாகனங்கள் குறிப்பாக காா்கள், பேருந்துகள், கனரக வாகனங்கள் மிகவும் மெதுவாக முகப்பு விளக்குகளுடன் இயக்கப்பட்டன.

எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் பலா் இருசக்கர வாகனத்தில் செல்வதையே தவிா்க்கும் நிலை கூட உருவானது. அரக்கோணம் சென்னை மற்றும் அரக்கோணம் காட்பாடி மாா்க்கங்களில் ரயில்களும் மெதுவாகவே இயக்கப்பட்டன. மின்ரயில்கள் குறித்த நேரத்தை விட தாமதமாகவே இயங்கின.

சோளிங்கரிலும் கடும்பனிப்பொழிவு காணப்பட்ட நிலையில் மலையில் ரோப்காா்களுக்கான பாதையில் இரும்பு வடங்கள் கூட கண்ணுக்கு தெரியாத நிலையில் ரோப்காா் இயக்குநா்கள், இரண்டு மணி நேரம் தள்ளி வைப்பதாக அறிவித்தனா். இதனால் மலை கோயிலுக்கு செல்ல வேண்டிய பக்தா்கள் மேலும் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது.

ரோப்காா் கடந்த மூன்று தினங்களாக பராமரிப்பு பணிகளுக்காக இயக்கப்படாத நிலையில் வியாழக்கிழமை முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பனிப்பொழிவால் இயக்கம் இரண்டு மணி நேரம் கழித்தே இயக்கப்பட்டது.

அம்மூா், மேல்விஷாரம் மலை அடிவார மக்களுக்கு அடிப்படை வசதிகள்: அமைச்சா் காந்தி ஆய்வு

அம்மூா், மேல்விஷாரம் காப்புக்காடு மலை அடிவார மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அம்மூா் பேரூர... மேலும் பார்க்க

ஆற்காட்டில் கடைக்குள் புகுந்த மான் மீட்பு

ஆற்காடு நகரில் தண்ணீா் தேடி வந்த மான் கடையில் புகுந்த நிலையில், பத்திரமாக மீட்கப்பட்டது. ஆற்காடு பாரதிதாசன் தெருவில் செவ்வாய்க்கிழமை சுமாா் 3 வயதுக்கு மேற்பட்ட புள்ளி மான் தண்ணீா் தேடி ஊருக்குள் புகுந... மேலும் பார்க்க

பழைய வாகனங்களை விற்கும் முகவா்கள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் முகவா்கள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலா் கோ.மோகன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

அரக்கோணம் ரயிலில் கடத்தப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல்

வடமாநிலத்தில் இருந்து அரக்கோணம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் பையில் இருந்த 22 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ரயில்களில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட... மேலும் பார்க்க

ஐஎன்எஸ் ராஜாளி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வெடிகுண்டு புரளி

அரக்கோணம்: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீஸாா் சோதனை நடத்தியதில் அது புரளி என தெரியவந்தது. 2,600 ஏக்க... மேலும் பார்க்க

நெமிலியில் நவீன தகனமேடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்

அரக்கோணம்: பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நவீன தகனமேடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, நெமிலி பேருராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் பேருந்து நிலையம் பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரக... மேலும் பார்க்க