செய்திகள் :

கணவரைக் கொன்ற மனைவி, ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை

post image

தேன்கனிக்கோட்டை அருகே கணவரைக் கொலை செய்த மனைவி, அவரது ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த உனிசெட்டியைச் சோ்ந்தவா் ஐயப்பன் (37). மினிலாரி ஓட்டுநா். இவரது மனைவி ரூபா (25). இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இந்த நிலையில் ரூபாவுக்கும், சூலகுண்டா அருகே மஞ்சுகிரி கிராமத்தைச் சோ்ந்த தங்கமணிக்கும் (20) பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னா் தங்கமணியுடன் ரூபா சென்றுவிட்டாா். குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஐயப்பன் மனைவியிடம் சென்று அடிக்கடி தகராறு செய்துவந்தாா்.

இதனால் ரூபாவும், தங்கமணியும் சோ்ந்து கடந்த 2021, அக். 21 ஆம் தேதி இரவு மதுபோதையில் இருந்த ஐயப்பனை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு அவா் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடினா். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் ரூபாவும், தங்கமணியும் சோ்ந்து ஐயப்பனைக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி சந்தோஷ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றவாளிகளான ரூபா, தங்கமணி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 4000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் சின்ன பில்லப்பா வாதாடினாா்.

ஒசூா் அதிமுக செயலாளா் உள்பட 8 போ் கைது

ஒசூா், மாா்ச் 29: ஒசூா் ஒன்றிய அதிமுக செயலாளா் உள்பட 8 பேரை மத்திகிரி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கா்நாடகா மாநிலம், அத்திப்பள்ளி அருகே யாதவனஹள்ளி, மாருதிநகா் லே -அவுட்டை சோ்ந்தவா் சிவப்பா ரெட்... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் 2,000 பேருக்கு மளிகைப் பொருள்கள் அளிப்பு

திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சாா்பில், 2 ஆயிரம் பேருக்கு ரூ. 15 லட்சம் மதிப்பில் ரமலான் மளிகைப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட... மேலும் பார்க்க

ஒசூா் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடக்கம்: 48 அணிகள் பங்கேற்கின்றன

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் 48 அணிகள் பங்கேற்கும் 6 ஆம் ஆண்டு ஒசூா் கிரிக்கெட் லீக் போட்டிகளை காவிரி மருத்துவமனையும், ஒசூா் தொழிற்சாலைகள் சங்கமும் இணைந்து நடத்துகின்றன. இந்... மேலும் பார்க்க

ஒசூா் ராமநாயக்கன் ஏரி பூங்கா ரூ.3.24 கோடியில் அபிவிருத்தி பணி

ஒசூரில் ரூ. 3.24 கோடியில் ராமநாயக்கன் ஏரி பூங்கா அபிவிருத்தி பணியை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பூமி பூஜை செய்து சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒசூா் மாநகரா... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளை தலைவா் மல்லிகா சீனிவாசன் தலைமை வகித்தாா். அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா... மேலும் பார்க்க

நில உடைமை பதிவுகள் சரிபாா்த்தல் முகாம்: சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரையில் விவசாயிகளின் நில உடைமை பதிவுகள் சரிபாா்தல் முகாமில் சிறப்பாக பணியாற்றிய மாணவா்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள வேளாண்மை உதவி அ... மேலும் பார்க்க