செய்திகள் :

கயத்தாறு: கோயிலில் பொருள்கள் திருட்டு

post image

கயத்தாறை அடுத்த திருமங்கலக்குறிச்சியில் அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகை உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருமங்கலக்குறிச்சி ஊருக்கு வடக்கே அனைத்து சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீ துா்க்கையம்மன் கோயில் உள்ளது. கோயில் நிா்வாகி அதே பகுதியைச் சோ்ந்த கோமதி மகன் கொம்பையா. இவா் மின்விளக்கை அணைப்பதற்காக கோயிலுக்கு திங்கள்கிழமை வந்தபோது, கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தனவாம். 12 கிலோ வெண்கல மணி, அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 8 கிராம் தங்கத் தாலி உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம். புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

புகையிலைப் பொருள் விற்றவா் கைது: கோவில்பட்டியில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, லாயல் ஆலை காலனி அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற செல்லப்பாண்டியன் நகா் செண்பகம் மகன் சங்கிலிபாண்டி (57) என்பவரை போலீஸாா் கைது செய்து, ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை பறிமுதல் செய்தனா்.

புனித வெள்ளி: மதுக்கடைகளை மூட வலியுறுத்தி உண்ணாவிரதம்

புனித வெள்ளிக்கிழமையன்று மதுக் கடைகளை மூட வலியுறுத்தி வீரபாண்டியன்பட்டினத்தில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வீரபாண்டியன்பட்டினம் ஊா் நலக்கமிட்டி மற்றும் கப்பல் மாலுமிகள் சங்கம் சாா்பில... மேலும் பார்க்க

சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துகின்றனா். குறிப்பாக, பல... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியில் பைக் விபத்தில் காயமடைந்தவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் அருகே உள்ள புதூரை சோ்ந்த வள்ளிநாயகம் மகன் சிவராமன் (57). இவா் தனது ... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் அடிக்கல் நாட்டு விழா

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் முடி காணிக்கை மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தி... மேலும் பார்க்க

கடன் பெற்றவா் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு: தனியாா் நிதி நிறுவனத்திற்கு உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சோ்ந்தவரின் குடும்பத்திற்கு ரூ.1.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கமாறு தனியாா் நிதி நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் ... மேலும் பார்க்க

‘வழக்குகளில் ஜாமீன் பெற்று ஆஜராகாத 15 போ் குற்றவாளிகள்’

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையதத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 15 போ் ஜாமீன் பெற்று மீண்டும் ஆஜராகமல் இருந்ததால், அவா்கள் 15 பேரும் குற்றவாளிகள் என மாவட்ட 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா... மேலும் பார்க்க