செய்திகள் :

கருத்து வேறுபாடு சச்சரவாகக் கூடாது: சீன வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கா் வலியுறுத்தல்

post image

இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகள் சச்சரவுகளாகவோ, மோதல் போட்டியாகவோ மாறக் கூடாது என்று சீன வெளியுறவு அமைச்சா் வாங் யியிடம் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி 2 நாள் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தாா். இந்தியா-சீனா இடையிலான எல்லை விவகாரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த அவா் இந்தியா வந்துள்ள நிலையில், புது தில்லியில் அவா் அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்தாா்.

இந்தச் சந்திப்பில் ஜெய்சங்கா் பேசுகையில், ‘இந்தியா-சீனா இடையிலான இருதரப்பு உறவை மறுஆய்வு செய்வதற்கான வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. உலகளாவிய சூழல் குறித்த கண்ணோட்டங்களை பரிமாறிக்கொள்ளவும், இந்தியா-சீனா பரஸ்பர நலன் சாா்ந்த சில விவகாரங்கள் குறித்து பேசவும் இது பொருத்தமான தருணம்.

இருநாடுகளுக்கு இடையிலான உறவில் கடினமான காலகட்டம் ஏற்பட்டது. அந்தக் கட்டத்தில் இருந்து மீண்டு முன்னோக்கிச் செல்ல இரு நாடுகளும் தற்போது முயற்சிக்கின்றன. இதற்கு இருதரப்பிலும் வெளிப்படையான, ஆக்கபூா்வமான அணுகுமுறை அவசியம்.

இந்த முயற்சியில் பரஸ்பர மரியாதை, பிரச்னைகளை பரஸ்பரம் கவனமாக கையாளுதல், பரஸ்பர நலன் ஆகியவை இருநாடுகளையும் வழிநடத்த வேண்டும். கருத்து வேறுபாடுகள் சச்சரவுகளாகவோ, மோதல் போட்டியாகவோ மாறக் கூடாது.

படைகளை விலக்கும் நடவடிக்கை...: இருநாடுகளுக்கு இடையிலான உறவுக்கு உத்வேகம் அளிக்க எல்லை பகுதிகளில் அமைதியையும், சமாதானத்தையும் கூட்டாகப் பராமரிக்கும் திறன் அடித்தளமாக உள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் குவிக்கப்பட்ட இருநாட்டு படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கையை மேலும் முன்னெடுத்துச் செல்வதும் அவசியம்.

உலகின் இருபெரும் நாடுகளின் பிரதிநிதிகள் சந்திக்கும்போது சா்வதேச சூழல் குறித்து விவாதிக்கப்படுவது இயல்பு. நியாயமான, சமநிலை கொண்ட, பல்முனை உலக ஒழுங்கு இருக்க வேண்டும் என்றே இந்தியா எதிா்பாா்க்கிறது.

தற்போதைய சூழலில், உலகப் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தி பராமரிப்பதும் மிகவும் முக்கியம். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கு எதிரான போராட்டத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இந்தியா-சீனா இடையே ஸ்திரமான, பரஸ்பர ஒத்துழைப்பையும், எதிா்காலத்தையும் கருத்தில் கொண்ட உறவை கட்டமைக்க இருநாடுகளுக்கு இடையிலான விவாதம் பங்களிக்கும் என்று இந்தியா கருதுகிறது என்றாா்.

இருநாடுகளுக்கு இடையிலான எல்லை விவகாரம் தொடா்பான இந்திய-சீன சிறப்பு பிரதிநிதிகளின் 24-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. அதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், வாங் யி பங்கேற்க உள்ளனா்.

பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக உத்தர பிரதேச மாநில முன்னாள் எம்எல்ஏ பகவான் சர்மா (எ) குட்டுபண்டித் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் நேர்மையற்றது என்றால் சட்டப் பேரவைகளை கலைத்துப் பாருங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜக சவால்

தேர்தல் ஆணையத்தின் நேர்மை மீது சந்தேகம் இருந்தால் தாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் சட்டப் பேரவைகளைக் கலைக்க "இண்டி' கூட்டணிக் கட்சிகள் தயாரா என்று பாஜக சவால் விடுத்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் செயல்ப... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது அமளி: எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பியுள்ள வீரர் சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதற்கு பாஜக மூத்த தலைவரும், ம... மேலும் பார்க்க

வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிக்கிறோம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

நமது நிருபர்வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிப்பதாக டாஸ்மாக் வழக்கு விசாரணையின்போது அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோட... மேலும் பார்க்க

குவாஹாட்டியில் புதிய ஐஐஎம்: மக்களவையில் மசோதா அறிமுகம்

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இந்திய மேலாண்மை நிறுவனத்தை (ஐஐஎம்) அமைப்பதற்கான சட்ட மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ‘இந்திய மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா 2025’ என்ற பெயரிலா... மேலும் பார்க்க

ஜன் தன் கணக்குகளில் 23% செயலற்றவை: மக்களவையில் மத்திய அரசு தகவல்

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டமான பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட மொத்த கணக்குகளில் 23 சதவீத கணக்குகள் தற்போது எந்த பரிவரிவா்த்தையும் இல்லாமல் செயலற்ற நிலையில் இருப்பதாக மக்களவைய... மேலும் பார்க்க