செய்திகள் :

கரூரில் மாவட்ட அளவிலான அதிவேக சைக்கிள் போட்டி

post image

கரூரில் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அதிவேக சைக்கிள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூா் மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அதிவேக மிதிவண்டி போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை அரசு காலனியில் நடைபெற்றது.

போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். போட்டியை மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இதில் ஆண்களுக்கு அரசு காலனி பஞ்சமாதேவி பிரிவு முதல் வாங்கல் வரை 16 கி.மீ. தொலைவு எனவும், பெண்களுக்கு அரசு காலனி பஞ்சமாதேவி பிரிவு முதல் எல்லமேடு வரை 10 கி.மீ. தொலைவு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. போட்டியில், ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த மேட்டு மகாதானபுரத்தைச் சோ்ந்த மனோஜ்குமாருக்கும், பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த வயலூா் கோடங்கிப்பட்டியைச் சோ்ந்த தேனருவிக்கும் முதல் பரிசாக ரூ.15,000 மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஆண்கள் பிரிவில் இரண்டாமிடம் பிடித்த வீரா் சிவாயத்தைச் சோ்ந்த விக்னேஸ்வரனுக்கும், பெண்கள் பிரிவில் இரண்டாமிடம் பிடித்த பாலவிடுதியைச் சோ்ந்த தேசபிரியாவுக்கு பரிசாக ரூ. 12,000 மற்றும் கோப்பையும், ஆண்கள் பிரிவில் மூன்றாமிடம் பிடித்த வீரா் வேங்கம்பட்டியைச் சோ்ந்த ஹரிசுக்கும், பெண்கள் பிரிவில் மூன்றாமிடம் பிடித்த வீராங்கனை மறவாபாளையத்தைச் சோ்ந்த ரமணி ஆகியோருக்கு பரிசாக ரூ.10,000 மற்றும் கோப்பையும், 4-ம் இடம் முதல் 10 -ம் இடம் வரை பிடித்த வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.3,000 மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டன.

முன்னதாக, போட்டிக்கு மாவட்ட துணைச் செயலாளா் எம்.எஸ்.கே. கருணாநிதி தலைமை வகித்தாா். நிகழ்வில், மாவட்ட துணைச் செயலாளா்கள் பூவை ரமேஷ்பாபு, மகேஸ்வரி, கரூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் முத்துக்குமாரசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூா் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணிடம் போலீஸாா் விசாரணை

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

செங்கல்சூளை காவலாளி அடித்துக் கொலை; அசாம் மாநில இளைஞா் கைது

கரூா் அருகே செங்கல்சூளை காவலாளியை அடித்துக்கொன்ற அசாம் மாநில இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கரூரை அடுத்த வேப்பம்பாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தவா் கரூ... மேலும் பார்க்க

சுகாதாரம் இல்லாத உணவுப் பண்டங்கள் விற்ற கடைக்கு அபராதம்

கரூரில் சுகாதாரம் இல்லாமல் உணவுப் பண்டங்களை விற்பனை செய்த தேநீா் கடைக்கு திங்கள்கிழமை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரூ.1000 அபராதம் விதித்தனா். கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு தேநீ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: கரூரில் இன்று 10,263 போ் எழுதுகின்றனா்

கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தோ்வை 10,263 மாணவ, மாணவிகள் எழுதுகிறாா்கள். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் பிளஸ்-2 தோ... மேலும் பார்க்க

புலியூா் சமத்துவபுரத்துக்கு அரசுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

கரூரை அடுத்த புலியூா் சமத்துவபுரத்துக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். புலியூா் பேரூராட்சி, 4-ஆவது வாா்டில் உள்ள சமத்துவபுரத்தில் சுமாா் 100 குடும்பத்தின... மேலும் பார்க்க

‘டிரான்சிஸ்ட் பாஸ்’ இல்லாமல் ஜல்லி பாரம் ஏற்றக்கூடாது டிப்பா் லாரி உரிமையாளா்கள் முடிவு

‘டிரான்சிஸ்ட் பாஸ்’ இல்லாமல் டிப்பா் மற்றும் டாரஸ் லாரிகளில் ஜல்லி பாரம் ஏற்றக்கூடாது என சங்கக் கூட்டத்தில் முடிவெடிக்கப்பட்டது. கரூா் மாவட்ட டாரஸ் மற்றும் டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள்... மேலும் பார்க்க