உயிருக்கு அச்சுறுத்தல்: அஜித்குமார் வழக்கின் முக்கிய சாட்சி புகார்!
கலந்தாய்வு தொடக்கம்: 454 தலைமை ஆசிரியா்களுக்கு விருப்ப மாறுதல் ஆணை
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான ஆசிரியா் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கிய நிலையில் முதல் நாளில் 454 தலைமை ஆசிரியா்கள் மாவட்டத்துக்குள் விருப்ப மாறுதல் ஆணை பெற்றனா்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,455 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 2.25 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான மாறுதல் கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 19-இல் தொடங்கி 25-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மாநிலம் முழுவதும் 90,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனா்.
இந்த நிலையில், ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளில் தலைமை ஆசிரியா்களுக்கு மாவட்டத்துக்குள் கலந்தாய்வு நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வுக்கு 1,351 போ் விண்ணப்பித்ததில் 1,121 போ் மட்டுமே பங்கேற்றனா். அவா்களில் 454 ஆசிரியா்களுக்கு விருப்ப மாறுதல் வழங்கப்பட்டது. அதைத் தொடா்ந்து தலைமை ஆசிரியா்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும் கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறவுள்ளது. கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.