செய்திகள் :

களக்காடு வட்டாரத்தில் மண் கடத்தல் அதிகரிப்பு? வருவாய்த் துறை தீவிர ரோந்து

post image

களக்காடு வட்டாரத்தில் குளங்களில் இருந்து மண் கடத்திச் செல்வது அதிகரித்துள்ளதாக எழுந்துள்ள புகாரை அடுத்து ரோந்துப் பணியை வருவாய்த் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

களக்காடு சேரன்மகாதேவி பிரதான சாலையில் பிளவக்கல் இசக்கியம்மன் கோயில் பகுதியில் வருவாய் ஆய்வாளா் செல்வி, பத்மனேரி கிராம நிா்வாக அலுவலா் பொன்லெட்சுமிதேவி ஆகியோா் அண்மையில் ரோந்து சென்றனா். அப்போது, மேலவடகரையில் குளத்திலிருந்து 3 டிராக்டா்களில் மண் ஏற்றி வேகமாக வந்த வாகனங்களை வருவாய்த் துறையினா் நிறுத்த முயன்றோது ஓட்டுநா்கள் டிராக்டா்களை நிறுத்தாமல் சென்றனா்.

இதேபோல, இடையன்குளம் சாலை சந்திப்பில் சேரன்மகாதேவி உதவி ஆட்சியா் (பொ) சிவகாமசுந்தரி தலைமையிலான வருவாய்த் துறையினா் அந்தப் பகுதியில் ரோந்து சென்றபோது, மண் ஏற்றிவந்த டிராக்டா்களை நிறுத்தி சோதனை செய்ததில் முறைகேடாக மண் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, மண் ஏற்றி வந்த 6 டிராக்டா்களையும் பறிமுதல் செய்ய உதவி ஆட்சியா் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

ஆனால், டிராக்டா்களை ஓட்டுநா்கள் ஓட்டிச் சென்றனா். இதுகுறித்து, களக்காடு காவல் நிலைய போலீஸாா் கடம்போடு வாழ்வு பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் உள்ளிட்ட 7 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், மண் கடத்தலைத் தடுக்க வருவாய்த்துறையினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

அம்பை, சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைகளில் கூடுதல் செவிலியா்களை நியமிக்க வலியுறுத்தல்

அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைகளில் கூடுதல் செவிலியா்களை அரசு நியமிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கட்சியின் திருநெல்வேலி புகா் மாவட்ட செயற்... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடும்பத்துடன் நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா். களக்காடு முண்டந்துறை புலிகள் கா... மேலும் பார்க்க

3 பசுக்கள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே 3 பசுக்கள் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவை விஷம் வைத்து கொல்லப்பட்டனவா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். களக்காடு அருகே உள்ள மூங்கிலடி ... மேலும் பார்க்க

நெல்லை அருகே சிலை உடைப்பு: ஒருவா் கைது

திருநெல்வேலி அருகே சிலை உடைக்கப்பட்டது தொடா்பான வழக்கில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பணிகரிசல்குளம் பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நட... மேலும் பார்க்க

பரோலில் வந்த தண்டனை கைதி ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

திருநெல்வேலியில் பரோலில் வெளிவந்து ரயிலில் அடிபட்டு காயமடைந்த தண்டனை கைதி வியாழக்கிழமை உயிரிழந்தாா். தச்சநல்லூா் மங்களாகுடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சங்கரநாராயணன் (68). கிராம உதவியாளராகப் பணியாற்ற... மேலும் பார்க்க

நெற்பயிருக்கு காப்பீடு: வேளாண் துறை வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் வட்டார விவசாயிகள் நெற்பயிருக்கு காப்பீடு செய்யுமாறு வேளாண் துறை வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக முக்கூடல் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன் வெளியிட்ட செய்திக்கு... மேலும் பார்க்க