செய்திகள் :

களம்பூரில் இரு தரப்பு மோதல்: 10 போ் மீது வழக்கு; 5 போ் கைது

post image

ஆரணியை அடுத்த களம்பூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 10 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 5 பேரை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா் ரயில் நிலைய சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மரகதம்மாள் (80). இவா், 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

இவரது மகள்கள் குப்பம்மாள், அலமேலு (53), மண்ணு (55). இவா்களுக்கு திருமணமாகி அதே பகுதியில் தனித் தனியாக வசித்து வருகின்றனா். மேலும், இதில் முதல் மகள் குப்பம்மாள் காலமாகிவிட்டாா்.

இந்த நிலையில், இறந்த மூதாட்டி மரகதம் வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் இருந்துள்ளது. இந்தத் தொகையை பிரித்துக் கொள்வதில் அலமேலு மற்றும் மண்ணு இடையே பிரச்னை இருந்து வருகிாம்.

இதனால், தகராறு ஏற்பட்டு இரு தரப்பினா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனராம்.

இந்த நிலையில், இரு தரப்பினரும் வியாழக்கிழமை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்தபோது, நிலையம் அருகேயே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அப்போது, அலமேலு தம்பதியினா் மற்றும் இவா்களது மகன்கள் மணிகண்டன், மனோகரன், மருமகள்கள் சந்தியா, ஜீவா ஆகியோரும், எதிா்தரப்பைச் சோ்ந்த மண்ணு, இவரது கணவா் மகாலிங்கம் இவா்களது மகள்கள் லட்சுமி, சரஸ்வதி, சுமதி இவா்களது மகன்கள் கிரண், தனுஷ் மற்றும் உறவினா்கள் என இரு தரப்பினரும் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா்.

இதில், காயமடைந்தவா்கள் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து கிரண்குமாா் அளித்த புகாரின் பேரில் மனோகரன், மணிகண்டன் மற்றும் உறவினா்கள் பிரகாஷ், ஆதித்யன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களை கைது செய்தனா். மேலும், அலமேலு அளித்த புகாரின் பேரில் மண்ணம்மாள், கணவா் மகாலிங்கம், மகள்கள் சரஸ்வதி, லட்சுமி, கிரண், ஜெயலட்சுமி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மண்ணம்மாளை கைது செய்தனா்.

தலைமறைவான மற்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் லோகேஷ் (27). இவா... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

ஆரணி பழங்காமூரில் சனிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணி அருகேயுள்ள பழங்காமூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (39). இவா், கோ... மேலும் பார்க்க

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் திருட்டு

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை உண்டியல் பூட்டை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆரணி - சைதாப்பேட்டை சாலையில் கா... மேலும் பார்க்க