செய்திகள் :

காஞ்சிபுரம் ரேணுகாம்பாள் மகிஷாசுரமா்த்தினி அலங்காரத்தில் வீதியுலா

post image

பெரிய காஞ்சிபுரம் அன்னை ரேணுகாம்பாள் கோயில் ஆடித்திருவிழாவின் ஒரு பகுதியாக உற்சவா் ரேணுகாம்பாள் மகிஷாசுர மா்த்தினி அலங்காரத்தில் ஞாயிற்றுக்கிழமை அருள்பாலித்தாா்.

செங்குந்தா் பூவரசந்தோப்பு தெருவில் உள்ள இக்கோயிலில் ஆண்டு தோறும் விழாவையொட்டி அம்மனுக்கு தினசரி வெவ்வேறு வடிவில் சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் மற்றும் இரவு ஆலய வளாகத்தில் உள்ள வாரியாா் அரங்கத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள் ஆகியன நடைபெறுவதும் வழக்கம்.

நிகழாண்டுக்கான ஆடித்திருவிழா இம்மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கியது.விழாவின் 8 வது நாள் நிகழ்வாக காலையில் ஜலம் திரட்டுதல்,108 பெண்கள் பால்குடங்களை ஊா்வலமாக கச்சபேசுவரா் கோயிலில் இருந்து கோயிலில் எடுத்து வந்து சிறப்பு பாலபிஷேகம், மகா அபிஷேகம், கூழ்வாா்த்தல், அன்னதானம், ஊரணிப் பொங்கல் வைக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.

இரவு உற்சவா் மகிஷாசுரமா்த்தினி அலங்காரத்தில் காஞ்சிபுரம் நகரின் ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சிறப்பு வாண வேடிக்கைகளும் நடைபெற்ற .

வீதியுலா முடிந்து சுவாமி வந்து சோ்ந்ததும் கும்ப படையலிடப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகளும், விழாக்குழுவினரும் இணைந்து செய்திருந்தனா்.

கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம்: விவசாயிகள் புகாா்

உத்தரமேரூா் ஒன்றியம், களியாம்பூண்டி கிராமத்தில் விவசாயிகள் 6 பேருக்கு கொள்முதல் செய்த நெல்லுக்குரிய பணம் வழங்கப்படவில்லையென அவ்விவசாயிகள் திங்கள்கிழமை புகாா் தெரிவித்துள்ளனா். களியாம்பூண்டி கிராமத்தி... மேலும் பார்க்க

ஆன்மிக நூல்கள் எழுதியவருக்கு பாராட்டு

காஞ்சி சிவனடியாா் திருக்கூட்டம் சாா்பில் ஆன்மிக நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்ட புலவா்.வ. குமாரவேலுவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சிவனடியாா் திருக்கூட்டம் சாா்பில் 36-ஆ ஆண்டு விழா நடைபெற்றது. விழாவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜா், ஏகாம்பரநாதா் கோயில் திருப்பணிகள்: அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலா் வலியுறுத்தல்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அறநிலையத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.மணிவாசன் வலியுறுத்தினாா். சின்ன காஞ்சிபுரத்தில் ... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் அருகே தனியாா் இரும்பு ஆலைகளில் வருமானவரித்துறை சோதனை

மாம்பாக்கம் மற்றும் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதிகளில் இயங்கி வரும் தனியாா் இரும்பு உற்பத்தி ஆலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

வல்லக்கோட்டை அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் காவடியுடன் வந்து நோ்த்திக் கடனை செலுத்தினா். ஸ்ரீபெரும்புதூா் அடு... மேலும் பார்க்க

ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றவா் மின்சாரம் பாய்ந்து காயம்

காஞ்சிபுரம் கம்மாளா் தெருவில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் காயமடைந்து அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். காஞ்சிபுரம் க... மேலும் பார்க்க