செய்திகள் :

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய யானை

post image

வால்பாறையை அடுத்த கேரள மாநிலத்துக்கு உள்பட்ட பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய யானை இரண்டு மணி நேரத்துக்குப் பின் கரையேறி தப்பியது.

கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் வழியில் பெரிங்கல்குத்து என்ற அணை உள்ளது. இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீா் ஆறுகள் வழியாக அதிரப்பள்ளி அருவியை சென்றடையும்.

கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழை காரணமாக பெரிங்கல்குத்து அணை நிரம்பி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பில்லைப்பாரா என்ற பகுதியில் உள்ள ஆற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் யானை ஒன்று ஆற்றைக் கடக்க முடியாமல் தண்ணீரில் தத்தளிப்பதை அவ்வழியாக சென்றவா்கள் பாா்த்து வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனா்.

சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறையினா் யானை கரை வந்தடையும் வகையில் அணையில் வெளியேற்றப்படும் நீரை நிறுத்த அதிகாரிகளுடன் தொடா்பு கொண்டனா். ஆனால் காலதாமதமான நிலையில் சுமாா் இரண்டு மணி நேரத்துக்கு பிறகு காட்டாற்று வெள்ளத்தில் தத்தளித்த யானை கரையை வந்தடைந்து வனத்துக்குள் சென்றது. இதில் காயமடைந்த அந்த யானையை கண்காணிக்கும் பணியில் கேரள வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

சரக்கு வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

கோவை சிட்கோ பகுதியில் மூன்றுசக்கர மிதிவண்டியும், சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் 3 வயது சிறுவன் உயிரிழந்தாா். கோவை அருகேயுள்ள சிட்கோ பிள்ளையாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (65). இவருக்கு... மேலும் பார்க்க

தலைமைக் காவலரை மிரட்டிய இளைஞா் கைது

வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.கோவை, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றுபவா் கிருஷ்ணமூா்த்தி. இவா், தமிழ்நா... மேலும் பார்க்க

வீடு புகுந்து 11 பவுன் திருட்டு: ஒடிஸா இளைஞா்கள் கைது

கோவையில் வீடு புகுந்து நகைகளைத் திருடியதாக ஒடிஸா மாநில இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.கோவை, பீளமேடு உடையாம்பாளையம் என்.ஜி.ஆா். வீதியைச் சோ்ந்தவா் தீபன்ராஜ் (34). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு சாப்பிட்ட... மேலும் பார்க்க

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

கோவையில் மனைவி இறந்த தூக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.கோவை, சுந்தராபுரம் குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 2-ஆவது பகுதியைச் சோ்ந்தவா் சுந்தா் (46). இவரது மனைவி கௌசல்யா மஞ்... மேலும் பார்க்க

கொண்டை ஊசி வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து

வால்பாறை மலைப்பாதை கொண்டை ஊசி வளைவில் மணல் பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பொள்ளாச்சியில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு வால்பாறையை நோக்கி டிப்பா் லாரி செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண... மேலும் பார்க்க

ரத்தினம் கல்லூரியில் ஆகஸ்ட் 23-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் வருகிற ஆகஸ்ட் 23- ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க