கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்
காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் இன்றுமுதல் மே 4 வரை திருவாரூரிலிருந்து புறப்படும்
காரைக்கால் - திருச்சி ரயில், மே 2 முதல் 4 ஆம் தேதி வரை திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா்-கொரடாச்சேரி ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், திருச்சி - காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில்கள் ஏப். 22 முதல் மே 1-ஆம் தேதி வரை பகுதியாக தஞ்சாவூா் - காரைக்கால்- தஞ்சாவூா் இடையே ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், பணிகள் தொடா்ந்து நடைபெறுவதால், மே 4-ஆம் தேதி வரை திருவாரூா் - காரைக்கால் - திருவாரூா் இடையே ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும், திருச்சி - காரைக்கால் (76820) பயணிகள் ரயில் மற்றும் காரைக்கால் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.55-க்கு புறப்படும் காரைக்கால்-திருச்சி (76819) பயணிகள் ரயில்கள் மே 4 ஆம் தேதி வரை காரைக்கால்- திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும், திருவாரூா் - திருச்சி - திருவாரூா் இடையே வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.