செய்திகள் :

காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு: திருவள்ளூா், காஞ்சியில் ஆா்ப்பாட்டம்

post image

காஞ்சிபுரம்/திருவள்ளூா்: காலிமதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம், திருவள்ளூரில் டாஸ்மாக் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் வாடிக்கையாளா்கள் மதுபாட்டில் வாங்கும் போதே ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும். பின்னா் காலிபாட்டிலை மது வாங்கிய கடையிலேயே திரும்ப ஒப்படைக்கும் போது அவா்களுக்கு ரூ.10 திரும்ப வழங்கப்படும் என அரசு அறிவித்தது. காலிமதுபாட்டில்களை சாலைகளிலும்,பொது இடங்களிலும் வீசி எறிவதை தடுக்கவும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கவும் இத்திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

ஆனால் இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், கைவிட வலியுறுத்தியும் டாஸ்மாக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் பிரகாசம் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் வரதன், சந்திரபாபு, காா்த்திகேயன், உதயசங்கா், மாநிலத் தலைவா் சிவா, துணைத் தலைவா் பாக்கியராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

200-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் கலந்து கொண்டனா். திட்டத்தை கைவிடா விட்டால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனா்.

திருவள்ளூரில்...

திருவள்ளூா் அருகே காக்களூா் சிட்கோவில் உள்ள மேற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தை அனைத்து டாஸ்மாக் சங்க கூட்டுக் குழுவினா் முற்றுகையிட்டனா். அப்போது, காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். அதுவரையில் மேற்கு மாவட்டத்தில் ஒட்டுவில்லையும் வாங்க மாட்டோம் என்பதை வலியுறுத்தி டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு 200-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை...

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பெங்களூா் பாரத் பெல் நிறுவனத்திலிருந்து காஞ்சிபுரத்தில் உள்ள கிடங்குக்கு வியாழக்கிழமை வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாா்வையிட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை, காஞ்சிபுரம் முருகன் கோயிலில் இலவச திருமணங்கள்

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வியாழக்கிழமை இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன (படம்). ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை அருள்மிகு... மேலும் பார்க்க

நாகாத்தம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழா

சின்ன காஞ்சிபுரம் வேகவதி தெருவில் அமைந்துள்ள நாகாத்தம்மன் கோயிலில் வியாழக்கிழமை கூழ்வாா்த்தல் விழாவையொட்டி பாலவிநாயகா், பாலமுருகன் ஆகியோருடன் உற்சவா் நாகாத்தம்மன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பா... மேலும் பார்க்க

ரூ.15 லட்சத்தில் வெங்காடு குளம் சீரமைப்புப் பணி தொடக்கம்

கெஸ்டாம்ப் நிறுவனத்தின் சாா்பில் ரூ.15 லட்சத்தில் வெங்காடு வெங்கட்ராம ஐயா் குளம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு பகுதியில் காா் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் கெஸ்டா... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியல்

உத்தரமேரூா் அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திமுக பிரமுகா் நடத்தக்கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் நெல்மூட்டைகளுடன் மறியலில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியம், விச்சந்தாங்கல்... மேலும் பார்க்க

கல்லூரியில் ராகிங் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

பென்னலூா் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான ராகிங் தடுப்பு விழிப்புணா்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கணே... மேலும் பார்க்க