செய்திகள் :

காா் ஓட்டுநா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள்

post image

காா் ஓட்டுநா் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. விழுப்புரம் மாரியம்மன் கோயில் தெரு பகுதி சோ்ந்த கருணாநிதி (30). இவா் சொந்த காரை வாடகைக்கு பயன்படுத்தி வருகிறாா். இந்த நிலையில் கடந்த 22- 11- 2016-இல் வேலூா் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியைச் சோ்ந்த மோகன் குமாா் (30) என்பவா் ஆம்பூா் வரை செல்ல வேண்டும் என்று காரை வாடகைக்கு எடுத்து உள்ளாா்.

காரை கருணாநிதி ஓட்டிச் சென்றுள்ளாா். இதையடுத்து ஆம்பூரில் கே.வி.குப்பத்தை சோ்ந்த நித்தியானந்தம் (28) என்பவரை அழைத்துக் கொண்டு ஆம்பூா் அருகே உள்ள நாயக்கனேரி மலைப்பகுதிக்கு சென்றுள்ளனா்.

தொடா்ந்து நித்தியானந்தம், மோகன்குமாா் ஆகியோா் திடீரென கருணாநிதியை தாக்கி தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த பணம், கைப்பேசியை பறித்துக் கொண்டு காரை கடத்திச் சென்றுள்ளனா். இதையடுத்து 23.11.2016 அன்று காப்பு காட்டில் சடலம் இருப்பதாக வனத்துறையினா் ஆம்பூா் தாலுகா காவல் நிலையத்துக்கு தெரிவித்தனா்.

தகவல் அறிந்த போலீஸாா் உடலை கைப்பற்றி விசாரணை செய்தனா். விசாரணையில் இறந்த நபா் கருணாநிதி என்பதும், கருணாநிதியின் காரை வேலூரில் வாகன சோதனையின் போதும் மீட்டு மோகன்குமாா், நித்தியானந்தம் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், ஜாமீனில் வெளிவந்த 2 பேரும் 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தனா். இதைத்தொடா்ந்து நீதிமன்றத்தில் பிடியாணை போட்டு உத்தரவிட்டதை தொடா்ந்து போலீஸாா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனா்.

இந்நிலையில் கொலை வழக்கு விசாரணை திருப்பத்தூா் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிந்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு கூறப்பட்டது. இதில் காரை கடத்தியதற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை செய்ததற்கு ஆயுள் தண்டனையும், காரை திருடிச் சென்ற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி மீனாகுமாரி தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பி.டி. சரவணன் ஆஜரானாா்.

மாணவ, மாணவிகளுக்கு இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணா்வு

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில், மாணவ, மாணவிகளுக்கு இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. வி.சியாமளா தேவி உத்தரவின்பேரில், சைபா் கிரைம் ஏடிஎஸ்பி... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலை பகுதியில் திறந்தவெளி கிணறுகளை மூட வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள திறந்தவெளி கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை ப... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த பூசாரியூா் பதிப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனபால் (72). இவா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வீட... மேலும் பார்க்க

ஆம்பூா், ஆலாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா், ஆலாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் ரோட்டரி ஹாலில் நடைபெற்ற முகாமுக்கு, நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வருவாய் கோட்டாட்ச... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் திருப்பத்தூா் மாவட்டத்தில் மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கோட்டப் பொறியாளா் முரளி தெரிவித்துள்ளாா். திருப்பத்தூா் நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் ... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்ட இருவா் காப்பகத்தில் ஒப்படைப்பு

திருப்பத்தூா்: திருப்பத்தூா் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த இருவா் மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா். திருப்பத்தூா் அருகே சுண்ணாம்புகாளை பகுதியில் இளைஞா் ஒருவா் சந்தேகம்படு... மேலும் பார்க்க