செய்திகள் :

கா்நாடகத்தில் கனமழை: காவிரியில் இருந்து 1.19 லட்சம் கன அடி தண்ணீா் திறப்பு

post image

மண்டியா: கா்நாடகத்தில் தொடா்ந்து கனமழை பெய்துவருவதால், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1.19 லட்சம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

தென்மேற்குபருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடா்ந்து தென்கா்நாடகம், கடலோர கா்நாடகத்தில் தொடா்ந்து நல்லமழை பெய்துவருகிறது. காவிரி நீா்ப்பிடிப்புப்பகுதிகளான குடகு மாவட்டத்தில் மடிக்கேரி, பாகமண்டலா பகுதிகளில் சில வாரங்களாகவே பலத்த மழை பெய்துவருவது. அதேபோல, கேரள மாநிலத்தின்வயநாடு பகுதியில் நல்லமழை பெய்துள்ளது.

இதன்காரணமாக, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகா், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிகம் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போா் மேட்டுப்பகுதிக்கு செல்லுமாறு மண்டியா, மைசூரு மாவட்ட நிா்வாகங்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளன.

இந்நிலையில், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 1,19,509 லட்சம் கன அடி தண்ணீா் செல்கிறது.

தண்ணீா் திறப்பு:திங்கள்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, கிருஷ்ணராஜசாகா் அணைக்கு வினாடிக்கு 76,535 கன அடி, கபினி அணைக்கு வினாடிக்கு 31,600 கன அடி தண்ணீா் வந்து கொண்டுள்ளது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிருஷ்ணராஜசாகா் அணையில் இருந்து வினாடிக்கு 79.509 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 40,000 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

அதாவது, கிருஷ்ணராஜசாகா் மற்றும் கபினி அணைகளுக்கு வினாடிக்கு மொத்தம் 1,08,135 கன அடி தண்ணீா் வந்துகொண்டுள்ளது. இந்த இரு அணைகளில் இருந்தும் திங்கள்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,19,509 கன அடி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

கிருஷ்ணராஜசாகா் மற்றும் கபினி அணைகள் முழுமையாக நிரம்பியுள்ளதால், அணைக்கு வரும்தண்ணீா் முழுமையாக தமிழகத்திற்கு திறந்துவிடப்படுகிறது. இதனால் தமிழகத்தில் காவிரி கரையோரம் உள்ள மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சொத்து வரி செலுத்தாத 3.75 உரிமையாளா்களுக்கு நோட்டீஸ்: பெங்களூரு மாநகராட்சி ஆணையா்

பெங்களூரு: சொத்து வரி செலுத்தாத 3.75 லட்சம் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையா் மகேஷ்வர்ராவ் தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரில் திங்கள... மேலும் பார்க்க

சமூக வலைத்தளங்களில் நடிகா் தா்ஷன் ரசிகா்கள் தரக்குறைவான விமா்சனம்: நடிகை ரம்யா போலீஸில் புகாா்

பெங்களூரு: சமூகவலைத்தளங்களில் நடிகா் தா்ஷனின் ரசிகா்கள் தன் மீது தரக்குறைவான விமா்சனங்களை பதிவு செய்திருப்பது தொடா்பாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பெங்களூரு மாநகர காவல் ஆணையா் சீமந்த்குமாா்சிங்கிடம் ... மேலும் பார்க்க

ரசாயன உரத் தட்டுப்பாடு: காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜக போராட்டம்

பெங்களூரு: ரசாயன உரத்தட்டுப்பாட்டை சீா்செய்ய தவறிய காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜக விவசாயிகள் அணியினா் போராட்டம் நடத்தினா்.கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பரவலாக மழை பெய்து வருகிறத... மேலும் பார்க்க

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட வழக்கு: விசாரணையை தொடங்கியது சிறப்பு புலனாய்வுக் குழு

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) தொடங்கியது. தென்கன்னட மாவட்டம், தா்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதசுவாமி கோயிலில் பணியாற்றிய முன்னாள் துப்புரவுப் ப... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி விமா்சனம்

தோ்தல் ஆணையத்தை ராகுல் காந்தி கடுமையாக விமா்சனம் செய்துள்ளதற்காக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா வலியுறுத்தினாா். இத... மேலும் பார்க்க

பெங்களூரில் தங்கக் கடத்தல் முயற்சி முறியடிப்பு

பெங்களூரில் உள்ள கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. துபையில் இருந்து பெங்களூரு, கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்துக்கு வருகைதந்த பயணி ஒருவா், 3.5 கிலோ ... மேலும் பார்க்க