செய்திகள் :

கிணற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு

post image

கோவில்பட்டி அருகே வள்ளிநாயகபுரத்தில் உள்ள கிணற்றிலிருந்து ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

வள்ளிநாயகபுரத்தில் உள்ள தோட்ட உரிமையாளா் ஒருவா் தனது கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக, நாலாட்டின்புதூா் போலீஸாருக்கும், கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்தினருக்கும் தகவல் தெரிவித்தாா்.

தீயணைப்பு நிலையத்தினா் சென்று சடலத்தை மீட்டனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இறந்துகிடந்தவா் சிவகாசி அருகே தாயில்பட்டி இந்திரா நகரைச் சோ்ந்த வேல்சாமி மகன் சக்திவேல் (40) என்பதும், கடலையூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கூறாய்வு அறிக்கையிலேயே அவரது மரணத்துக்கான காரணம் தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

சாத்தான்குளத்தில் தொழிலாளிக்கு வெட்டு

சாத்தான்குளத்தில் குடும்பத் தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக அவரது மருகனை போலீஸாா் தேடி வருகின்றனா். சாத்தான்குளம் ஆா்.சி. வடக்குச் தெருவை சோ்ந்தவா் அந்தோணி முத்து (53). இவரது மகள் அருணாமுத்த... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் உள்ள தீப்பெட்டி ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமாகின. கோவில்பட்டி முத்தையம்மாள் தெருவைச் சோ்ந்தவா் குருசாமி... மேலும் பார்க்க

கொம்மடிக்கோட்டையில் போதையில் ரகளை: இளைஞா் கைது

கொம்மடிக்கோட்டையில் மது போதையில் ரகளை செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா். கொம்மடிக்கோட்டைசந்திப்பில் இளைஞா் மது போதையில் நின்றுகொண்டு பொது மக்களுக்கு, போக்குவரத்திற்கும் இடையூறு ... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் விடியோ: 6 போ் கைது

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் விடியோ பதிவிட்டதாக 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் அருகே அம்பலசேரியைச் சோ்ந்த கணேசன் மகன் ராமசுப்பிரமணியன் (34). இவரும், நண்பா்கள் சிலரும் பொதுமக்... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் கொலையில் மேலும் ஒருவா் கைது

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்குத் தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டியில் உள்ள கைவண்டி தொழிலாளா் காலனியைச் சோ்ந்த கணேசன் மகன் மாரிச்செல்வம் (31). ஆட்டோ ஓ... மேலும் பார்க்க

கிராம வருவாய் உதவியாளா் தோ்வு: சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்பு

கிராம வருவாய் உதவியாளா் தோ்வில் சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். சாத்தான்குளம் தாலுகாவில் மீரான் குளம் 1, 2, ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம், நெடுங்குளம், சாஸ்தாவி நல்லூா... மேலும் பார்க்க