செய்திகள் :

கிண்டி ரேஸ் கிளப் இடத்துக்கு மாறும் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம்!

post image

சென்னை கிண்டியில் ரேஸ் கிளப் செயல்பட்டு வந்த இடத்துக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மாற்றப்பட உள்ளது. இதற்கான உத்தரவை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா பிறப்பித்துள்ளாா்.

உத்தரவு விவரம்: சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைந்துள்ள நிலத்தில் புதிய பல அடுக்கு நீதிமன்றக் கட்டடம் கட்டப்பட உள்ளது. எனவே, சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தைப் பிற மாவட்டங்களில் இருப்பதைப் போன்று, ஆட்சியா் முகாம் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலா் முகாம் அலுவகம் என அனைத்து வசதிகளுடன் கூடியதாக மாற்றுவது இன்றியமையாததாகும்.

இதைக் கருத்தில் கொண்டு, சென்னை கிண்டியில் உள்ள வெங்கடாபுரம் கிராமத்தில் காலியாகவுள்ள 1.43 ஹெக்டோ் பரப்பிலான புறம்போக்கு நிலத்தில் ஆட்சியா் அலுவலகம் கட்டப்பட உள்ளது.

நில மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தின் ஒரு சதுர மீட்டருக்கான மதிப்பு ரூ.68,515 ஆகும். இது தொடா்பாக, வருவாய் ஆவணங்களில் உரிய திருத்தங்களை ஒரு மாத காலத்துக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று நில நிா்வாக ஆணையரும், சென்னை மாவட்ட ஆட்சியரும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்று தனது உத்தரவில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்துள்ளாா்.

ரேஸ் கிளப்: கிண்டி வெங்கடாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வந்த ரேஸ் கிளப் கட்டுமானங்கள் இடிக்கப்பட்டன. அரசுப் புறம்போக்கு காலி நிலமாக உள்ள பகுதியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி!

பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை கூடுதல் சிபிஐ நீதிமன்றம் தள்ள... மேலும் பார்க்க

வைணவ கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம் தொடக்கம்!

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கு பக்தா்கள் கட்டணமில்லா ஆன்மிகப் பயணம் செல்லும் திட்டத்தை, துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் சென்னையில் தொடங்கி வைத்தாா். தமிழக சட... மேலும் பார்க்க

ஒடிஸாவிலிருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்!

சென்னை அடையாறு பகுதியில் ஒடிஸாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மேற்கு வங்க இளைஞா் கைது செய்யப்பட்டாா். அடையாறு கஸ்தூரி பாய் நகா் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவத... மேலும் பார்க்க

போதையின் தீமைகள்: விழிப்புணா்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவா்கள்

போதைப் பழக்கங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் சென்னை சமூகப்பணி கல்லூரியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். சென்னை சமூகப்பணி கல்லூரியில் முதுநிலை மாணவா... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து திருட்டு

சென்னை அண்ணா நகரில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். கோடம்பாக்கம் ரயில்வே சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பக்கீா் முகமது (40). அண்ணா நகா் 13-ஆவது பிரதான சாலைய... மேலும் பார்க்க

ஸ்ரீ ராமச்சந்திராவில் நிறுவனா் தின விழா

சென்னை போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனா் தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவா்கள், நீண்ட காலம் பணியாற்றியவா்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள் வழ... மேலும் பார்க்க