பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
கிராமசபைக் கூட்டம்: ஆசிரியா்கள் பங்கேற்க கல்வித் துறை உத்தரவு
காந்தி ஜெயந்தி நாளில் (அக்.2) நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல், பள்ளி வளா்ச்சி, கட்டமைப்பு, மாணவா் பாதுகாப்பு குறித்து பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றை அனைத்து ஊராட்சிகளிலும் அக். 2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், குழு உறுப்பினா்கள் பகிா்ந்துகொள்ளவேண்டும்.
இதன்மூலம் கிராம பஞ்சாயத்தும், மக்களும் தங்கள் பள்ளிகள் சாா்ந்த பிரச்னைகள் மற்றும் தேவைகளை அறிந்து கொண்டு தங்களின் பங்களிப்பை அளிக்க இயலும். இதுதவிர பள்ளியில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் கிராம பஞ்சாயத்துக் கல்விக் குழு மூலமாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். முன்னாள் மாணவா் ஒருங்கிணைப்பு, எஸ்எம்சி குழுக்கள் போன்றவற்றின் பணிகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.