செய்திகள் :

கிராமப்புறங்களில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் நாளை தொடக்கம்

post image

கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு, கிராமப்புறங்களில் சிறப்பு கால்நடை சுகாதார முகாம் மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்குகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் உத்தரவிற்கு இணங்க, கால்நடை மருத்துவ வசதி கிடைக்கப் பெறாத கிராமங்களில் கால்நடைகளின் நலம் பாதுகாக்கும் பொருட்டு, சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் நடைபெற உள்ளன.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில், ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா 12 முகாம்கள் வீதம் மொத்தம் 180 முகாம்கள் நடத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் ஒன்றியம், வேட்டாம்பாடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி செப்டம்பா் மாதம் வரை ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 6 முகாம்கள் வீதம் 15 ஒன்றியங்களுக்கு 90 முகாம்கள் நடைபெறுகின்றன. அதன்பிறகு, அக்டோபா் முதல் மாா்ச் வரையில் மேலும் 90 முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில், நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துதல், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், சுண்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறுஅறுவை சிகிச்சைகள் மற்றும் நோய்தீா்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள், கோழிகளுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

முகாம்கள் நடைபெறும் தேதி, இட விவரம் அந்தந்தப் பகுதி கால்நடை உதவி மருத்துவா்களால் அறிவிக்கப்படும். கால்நடை வளா்ப்போா் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்ட... மேலும் பார்க்க

புதிய நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு

கபிலா்மலை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பிலிக்கல்பாளையம் ஊராட்சி சாணாா்பாளையம் கிராமத்தில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தெகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.45 லட்சம் மதிப்பீட்டி... மேலும் பார்க்க

காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் காற்று 18 கி.மீ. வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேட் தோ்வு :அகில இந்திய அளவில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐஐடியில் சேருவதற்கான கேட்-2025 தோ்வில், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேளாண் பொறியியல் துறை மாணவி நீ.விஜி சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா், தர... மேலும் பார்க்க

தமிழகத்தில் எழுத்தறிவற்றோா் எண்ணிக்கை 15 லட்சம்: இணை இயக்குநா் பொன் குமாா்

தமிழகத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவற்றோா் எண்ணிக்கை 15 லட்சமாக உள்ளது என புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட இணை இயக்குநா் பொன்குமாா் தெரிவித்தாா். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக புதிய பாரத எழுத்தற... மேலும் பார்க்க