செய்திகள் :

கிரிக்கெட் மட்டைக்காகச் சண்டை: 10 வயது சிறுமியைக் குத்திக்கொன்ற பத்தாம் வகுப்பு மாணவன்!

post image

கிரிக்கெட் மட்டையைத் திருடச் சென்ற 14 வயது சிறுவன் ஒருவன், 10 வயது சிறுமியைக் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தின் குகட்பள்ளி பகுதியிலுள்ளதொரு வீட்டில் 10 வயது சிறுமியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியகியுள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுவன் ஒருவன், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர் அந்தச் சிறுமியின் வீட்டிலுள்ள ஒரு கிரிக்கெட் மட்டையை திருடுவதற்காக சம்பவ நாளான ஆக. 18 அன்று காலை அந்த வீட்டுக்கு யாருக்கும் தெரியாமல் சென்றதாக கூறப்படுகிறது. வீட்டில் யாருமில்லை என்று நுழைந்த சிறுவன், அங்கிருந்த சிறுமியின் கண்ணில் பட்டுள்ளார்.

உடனே அந்தச் சிறுமி கத்தியுள்ளார். இதனால் திடுக்கிட்ட சிறுவன் தன்னிடமிருந்த ஒரு கத்தியால் அந்தச் சிறுமியைக் குத்தியுள்ளார்.அதில் சிறுமி உயிரிழந்தார்.

சிறுவன் பயன்படுத்திய ஆயுதமும் அவரிடமிருந்த காகிதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் திருட திட்டம் தீட்டி அவர் வரைபடம் உள்ளிட்டவை வரைந்திருந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இணையதளங்களில் திருட்டு, கொலை சம்பந்தப்பட்ட பல காணொலிகளை அந்தச் சிறுவன் பார்த்து வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

murder of 10-year-old girl in Kukatpally; a 14-year-old boy from a neighbouring house stabbed her

இளநிலை பட்டப்படிப்பில் ‘அட்சர கணிதம்’, ‘பஞ்சாங்க’ பாடங்கள்: யூஜிசி வரைவு பாடத்திட்டத்தில் பரிந்துரை

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) வரைவு பாடத்திட்டத்தில், இளநிலை பட்டப்படிப்புகளின் கணித பாடத்தில் பாரத அட்சர கணிதம் (இந்திய அல்ஜீப்ரா), பஞ்சாங்கம் உள்ளிட்டவை குறித்து கற்பிக்கப் பரிந்துரை செய்யப்... மேலும் பார்க்க

சென்னை ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் ஹரியாணா புறப்பாடு

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் என்ஜின் மற்றும் 8 பெட்டிகள் ஹரியாணா மாநிலத்துக்கு சனிக்கிழமை கொண்டு செல்லப்பட... மேலும் பார்க்க

விரைவில் கனிம வா்த்தக சந்தை அமைக்கப்படும்: மத்திய அமைச்சா்

‘லண்டன் உலோக வா்த்தக சந்தையைப் போன்று விரைவில் கனிம வா்த்தக சந்தையை மத்திய அரசு அமைக்க உள்ளது’ என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா். இந்திய பங்குச் சந்தை ஒ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி குறித்து அவதூறு: தேஜஸ்வி யாதவ் மீது வழக்குப் பதிவு

பிரதமா் நரேந்திர மோடியை ‘வாக்கு திருடா்’ என்று குறிப்பிட்டு பதிவிட்டது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாா்களின் அடிப்படையில் உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும... மேலும் பார்க்க

நக்ஸல் ஆதரவாளா் என விமா்சனம்: அமித் ஷாவுக்கு சுதா்சன் ரெட்டி பதிலடி

தன்னை நக்ஸல் ஆதரவாளா் என விமா்சித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு ‘இண்டி’ கூட்டணி குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான பி. சுதா்சன் ரெட்டி பதிலடி கொடுத்துள்ள... மேலும் பார்க்க

நாட்டின் சட்டக்கல்வி வலுப்பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘நாடு முழுவதும் ஏராளமான மாணவா்கள் சட்டக் கல்வியைப் பயிலும் நிலையில், அதை வலுப்படுத்துவதில் அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். கோ... மேலும் பார்க்க