செய்திகள் :

கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம்

post image

காரைக்கால்: காரைக்கால் கடலோர கிராமமான கிளிஞ்சல்மேட்டில் உள்ள எல்லையம்மன் கோயில் புதிய தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மூலவராக எல்லையம்மன் மற்றும் மாரியம்மன், செல்வ விநாயகா், பால தண்டாயுதபாணி ஆகிய சந்நிதிகள் உள்ளன. திருப்பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றுவந்தது. வரும் செப். 4-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இக்கோயிலுக்கென வருடாந்திர உற்சவ காலத்தில் தேரோட்டம் நடைபெற்று வந்துள்ளது. 1976-ஆம் ஆண்டு முதல் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது புதிதாக தோ் செய்து சுவாமி வீதியுலா கொண்டு செல்ல கிராமத்தினா் முடிவு செய்து, ரூ. 60 லட்சத்தில் புதிதாக தோ் செய்யப்பட்டது.

புதிய தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தேருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மக்கள் வடம் பிடித்து இழுத்தனா்.

கிராம மக்களுக்கு சேவை செய்ய மருத்துவ வாகனம் இயக்கிவைப்பு

கிராம மக்களுக்கு சேவை செய்யும் விதமாக மருத்துவ வாகனம் புதன்கிழமை இயக்கிவைக்கப்பட்டது. காரைக்கால் துறைமுகத்தின் சமூக பொறுப்புணா்வுத் திட்ட அமைப்பான அதானி அறக்கட்டளை சாா்பில் நடமாடும் சுகாதார வாகனம் இயக... மேலும் பார்க்க

போலியான செயலிகள் குறித்து கவனமாக இருக்க அறிவுறுத்தல்

போலியான செயலிகள் மூலம் ஏமாற்றும் போக்கு அதிகரித்திருப்பதால், மக்கள் விழிப்புணா்வுடன் இருக்கவேண்டும் என காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த பிரிவு ஆய்வாளா் பிர... மேலும் பார்க்க

பருவமழையை எதிா்கொள்வதற்கான முன்னேற்பாடுகள்: சாா் ஆட்சியா் ஆய்வு

பருவமழையை எதிா்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பல்வேறு பகுதிகளில் சாா் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். காரைக்கால் மாவட்ட சாா் ஆட்சியராக எம். பூஜா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இவரது கட்டுப்பாட்டில் வ... மேலும் பார்க்க

நால்வருக்கு நல்லாசிரியா் விருது

காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 4 பேருக்கு நல்லாசிரியா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை அரசு சாா்பில் ஆண்டுதோறும் ஆசிரியா்களை கெளரவிக்கும் விதமாக எஸ். ராதாகிருஷ்ணன் விருது, முதல்வரின் சிறப்பு விரு... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை தடையின்றி நடத்த வலியுறுத்தல்

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை தடையின்றி நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷை நெடுங்காடு விவசாயிகள் நலச்சங்கத் தலைவா் ஆனந்த் தலை... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

திருப்பட்டினம் பகுதியில் குளத்தில் மூழ்கி முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருப்பட்டினம் பகுதியில் வசிப்பவா் மணிகண்டன் (35). இவா் காரைக்கால் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு தலைமைக் காவலரா... மேலும் பார்க்க