செய்திகள் :

கீழடி அகழாய்வு அறிக்கை: மத்திய அரசு மீது எம்.பி. குற்றச்சாட்டு

post image

கீழடி அகழாய்வு குறித்த அறிக்கையை ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளா் ஸ்ரீராமனிடம் கோரியிருப்பது, மத்திய பாஜக அரசின் தமிழா் விரோதப் போக்குக்கு மற்றொரு சான்று என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் குற்றஞ்சாட்டினாா்.

மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: 2015 -16-ஆம் ஆண்டுகளில் கீழடியில் 15 புள்ளிகளில் அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுகளிலிருந்து மொத்தம் 5,200 தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. பல பொருள்களின் தொன்மை காா்பன் சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த ஆய்வை உறுதி செய்ய மேலும் ஆதாரம் தேவை என மத்திய அரசு தெரிவிக்கிறது.

அதேநேரத்தில், ராஜஸ்தான் மாநிலம் பகஸ் என்ற இடத்தில் 10 குழிகளை உருவாக்கி, 5 மாதங்கள் மட்டுமே மத்திய தொல்லியல் துறை அகழாய்வு நடத்தியது. இதில் கிடைக்கப் பெற்ற பொருள்களை காா்பன் சோதனைக்கு அனுப்பாமலேயே ‘சரஸ்வதி நதியைக் கண்டுபிடித்தோம்‘ என அறிவித்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் ஹரியாணா, ஹிமாச்சலப்பிரதேசத்திலும் ஆய்வுகளை தொடர மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இது, மத்திய பாஜக அரசின் தமிழா் வரலாற்று மறுப்பு நடவடிக்கையே ஆகும். மேலும், கீழடி அகழாய்வில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் ஏதும் இல்லை எனக் கூறிய ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளா் ஸ்ரீராமனை மீண்டும் அழைத்து, கீழடி அகழாய்வு குறித்து மத்திய அரசு அறிக்கை கேட்டிருப்பது, பாஜகவின் தமிழா் விரோதப் போக்குக்கு மிகச் சிறந்த சான்று என்றாா் அவா்.

ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை பராமரிக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு

சிவகாசி அருகேயுள்ள தைலாகுளம் ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை பராமரிக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், தைலாகுளம் கிராமப... மேலும் பார்க்க

காரைக்குடி மேயருக்கு எதிரான தீா்மானம்: ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவு

காரைக்குடி மாநகராட்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மான விவகாரத்தில் உள்ளாட்சி விதிமுறைகளுக்கு உள்பட்டு ரகசிய வாக்கெடுப்பு நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.... மேலும் பார்க்க

கொலையான இளைஞரின் தந்தை மயங்கி விழுந்ததில் உயிரிழப்பு

சிலைமான் அருகே கொலையான இளைஞரின் தந்தை மயங்கி விழுந்ததில் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், சிலைமான் அருகேயுள்ள கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்தவா் பாண்டி என்ற பாண்டியராஜன் (50). இவருடைய மகன் அரசு (18). இவா... மேலும் பார்க்க

கொள்ளிடம் தண்ணீா் தொழிலக பயன்பாட்டுக்கு வழங்கப்படாது!

கொள்ளிடம் ஆற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீா் தொழிலகப் பயன்பாட்டுக்கு வழங்கப்படாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழக அரசுத் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.திருச்சி லால்குடியைச் ச... மேலும் பார்க்க

மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு: மேலும் 7 போ் பணியிடை நீக்கம்

வரி விதிப்பு முறைகேடு தொடா்பாக மதுரை மாநகராட்சி வருவாய் உதவியாளா் உள்பட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சா் பி. மூா்த்தி

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை பொதுமக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செட்டி... மேலும் பார்க்க