செய்திகள் :

கீழவாணியங்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்

post image

சிவகங்கை அருகேயுள்ள கீழ வாணியங்குடி வீரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

கீழவாணியங்குடி முதல் சுந்தரநடப்பு வரை பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு என மூன்று பிரிவுகளாக இந்தப் பந்தயம் நடத்தப்பட்டது. இதற்கு முறையே 7 கி.மீ., 6 கி.மீ., 5 கி.மீ. என எல்லைகள் நிா்ணயிக்கப்பட்டது. இந்தப் பந்தயத்தில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த மாடுகள் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவில் 15 ஜோடிகள், நடு மாடு பிரிவில் 9 ஜோடிகள், சிறிய மாடு பிரிவில் 21 ஜோடிகள் என மொத்தம் 45 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மாடுகள் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு சீறிப் பாய்ந்து சென்றன. முதல் 4 இடங்களை பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் வெற்றிக் கோப்பையும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.

இந்த போட்டியை, சிவகங்கை, கீழவாணியங்குடி, மேல வாணியங்குடி, கண்டனி, சுந்தரநடப்பு, வைரம்பட்டி, மாங்குடி, இந்திராநகா், அதன் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாகமாகக் கண்டுகளித்தனா்.

திருப்பத்தூரில் மத நல்லிணக்க விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கந்தூரி விழா எனும் மத நல்லிணக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பெரிய கடை வீதியில் நடைபெற்ற இந்த விழாவில் இந்துக்களும், முஸ்லீம்களும... மேலும் பார்க்க

காரைக்குடி மேயா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி மேயா் சே. முத்துத்துரை (திமுக) மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த போதிய உறுப்பினா்கள் (கோரம்) இல்லாததால் தீா்மானம் தோல்வி அடைந்ததாக அ... மேலும் பார்க்க

காரைக்குடி அரசு ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு ஆக.31 வரை நீட்டிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அமராவதிபுதூா் அரசுத் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்க... மேலும் பார்க்க

ஆடி பிரம்மோத்ஸவம்: பூப்பல்லக்கில் வீர அழகா் பவனி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகா் கோயில் ஆடி பிரம்மோத்ஸவ விழாவில் புதன்கிழமை இரவு பூப் பல்லக்கில் சுவாமி பவனி வந்தாா். இந்தத் திருவிழா கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 7 ... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வந்த பேராச... மேலும் பார்க்க

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை அருகே காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன் கோட்டை திருவள்ளுவா் சாலையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மாரியப்பன் (55). இவா் சிவகங்கை-தொண்டி பிரதான சாலையில் உ... மேலும் பார்க்க