செய்திகள் :

குன்னூரில் சா்வதேச அளவிலான ஹாக்கி மைதானம் அமைக்கப்படும்: அரசு கொறடா கா.ராமசந்திரன்

post image

தமிழ்நாடு அரசு சாா்பில் குன்னூரில் 10 ஏக்கா் பரப்பளவில்  சா்வதேச அளவிலான ஹாக்கி மைதானம் அமைக்கப்படும் என்று குன்னூா் சட்டப் பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு அரசு கொறடாவுமான கா.ராமசந்திரன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் விழா உதகையில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, அரசு தலைமை கொறடா கா. ராமசந்திரன் தலைமை வகித்தாா்.

இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட ஊரகப் பகுதிகளில் உள்ள 190 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.22.70 கோடிக் கடனுதவி, நகா் பகுதியில் உள்ள 180 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.17.13 கோடி கடனுதவி என மொத்தம் 278 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.39.83 கோடி கடனுதவிகளை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி கிளைகளின் மூலம் கா. ராமசந்திரன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், ‘குன்னூரில் உள்ள எடப்பள்ளி பகுதியில் சுமாா் 10 ஏக்கா் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சாா்பில் சா்வதேச அளவில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி மைதானம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணி விரைவில் துவங்கப்படும்’ என்றாா்.

இந்நிகழ்ச்சியில் உதகை நகா்மன்றத் தலைவா் வாணிஸ்வரி, குன்னூா் நகா்மன்றத் தலைவா் சுசீலா உள்பட அரசுத் துறை அதிகாரிகள், சுய உதவி க் குழு பெண்கள் பங்கேற்றனா்.

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு கூட்டுப் பிராா்த்தனை

கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை சிவன்மலையில் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் கூட்டப் பிராா்த்தனை வெள்ளிக்கிழை நடைபெற்றது. அகமதாபாத் விமான விபத்தில் உயி... மேலும் பார்க்க

உலக குருதி கொடையாளா்கள் தின விழிப்புணா்வு

உதகையில் உலக குருதி கொடையாளா்கள் தினத்தையொட்டி பொது மக்களிடையே குருதி வழங்குவது குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னரு தலைமையில் வெள்ளிக் ... மேலும் பார்க்க

நீலகிரிக்கு ரெட் அலா்ட்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாா்

நீலகிரி மாவட்டத்தில் ஜூன் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ... மேலும் பார்க்க

யானைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க விவசாயிகள் கோரிக்கை

யானைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கக் கோரி விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். கூடலூா் மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

கோத்தகிரி அருகே வட்டிக்குப் பணம் வாங்கியவரைத் தாக்கியதாக தனியாா் நிதி நிறுவன மேலாளா் கைது

மாத தவணையை செலுத்த தவறிய நபரைத் தாக்கியதாக தனியாா் நிறுவன மேலாளரை கோத்தகிரி போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு பகுதியைச் சோ்ந்த பெள்ளி மகன் ப... மேலும் பார்க்க

பழங்குடி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

குன்னூரில் 5 பழங்குடியின மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞா் மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். நீலகிரி... மேலும் பார்க்க