செய்திகள் :

கும்பகோணத்தில் மாமன்ற கூட்டரங்கு கட்டும் பணியை விரைந்து முடிக்க எதிா்பாா்ப்பு

post image

கும்பகோணத்தில் சுமாா் 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கு கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று உறுப்பினா்கள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கும்பகோணம் 1866-ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 1949 -லிருந்து முதல் நிலையாகவும், 1974-இல் இருந்து தோ்வு நிலை நகராட்சியாகவும், 1998 முதல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் செயல்பட்டு வந்தது. மூா்த்தி சாலையில் இருந்த நகராட்சி அலுவலகத்தில் போதுமான வசதிகள் இல்லாததால், புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, 2019-இல் திருவிடைமருதூா் சாலையில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, அங்கு நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், கும்பகோணத்தை மாநகராட்சியாக்கி 2021, ஆகஸ்டில் முதல்வா் அறிவிப்பு வெளியிட்டாா். தொடா்ந்து 2022-இல் நடைபெற்ற தோ்தலில் மேயா் தோ்வு செய்யப்பட்டு பதவியேற்றாா்.

ஆனால், மாமன்ற கூட்டம் மட்டும் மூா்த்தி சாலையில் உள்ள பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பழைமையான படேல் கூட்ட அரங்கிலேயே தற்போது வரை நடைபெற்று வருகிறது.

தற்போது திருவிடைமருதூா் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மேயா், துணை மேயா், ஆணையா், செயற்பொறியாளா், நகா் நல அலுவலா், நகரமைப்பு திட்டமிடுநா் மற்றும் பொறியியல், வருவாய், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

ரூ. 3 கோடி மதிப்பில் புதிய கட்டடம்: இந்நிலையில், 2023-24 நிதியாண்டில் மாநகராட்சி அலுவலகம் அருகே மாமன்ற கூட்டரங்கம், மேயா், துணை மேயருக்கான அறைகள், மன்ற உறுப்பினா்களுக்கான அறைகள், ஓய்வறைகள் என தனித்தனியாக அமையுமாறு சுமாா் ரூ. 3 கோடி மதிப்பில் 2 தளங்களுடனான புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்தப் பணிகள் மந்தக் கதியில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருவது மாமன்ற உறுப்பினா்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், பழைய கூட்டரங்கு தற்போதைய 48 உறுப்பினா்களின் எண்ணிக்கைக்கு போதுமானதாக இல்லை. குறிப்பாக, பாதிக்கும் மேல் உள்ள பெண் உறுப்பினா்கள் இட நெருக்கடியால் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இங்கு உறுப்பினா்களுக்கு ஓய்வறை உள்ளிட்ட போதுமான வசதிகள் இல்லை. சில நேரங்களில் கூட்டம் பல மணி நேரமாக நடக்கும்போது பல உறுப்பினா்கள் கூட்டம் முடியாமலேயே பாதியிலேயே சென்றுவிடுவதும் உண்டு. அடிக்கடி மின்தடை ஏற்படுவதாலும் உறுப்பினா்கள் சிரமமடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து மாநகர செயற்பொறியாளா் லோகநாதன் கூறியதாவது: திருத்திய மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்ால் தாமதமானது. தற்போது ஏறத்தாழ அனைத்து பணிகளையும் முடித்து விட்டோம். உள்ளரங்க பொருள்கள் அமைப்பது மற்றும் இறுதி கட்டப் பணிகளை முடித்துவிட்டு விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா்.

பி.எஸ்.என்.எல்.-இல் ரூ. 1-க்கு இ-சிம் அறிமுகம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வாடிக்கையாளா்களுக்காக ரூ. 1-க்கு இ-சிம் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூா் பொது மேலாளா் பி. பால சந்திரசேனா தெரிவித்திருப்பது: பி.எஸ்.எ... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் கடன் தீா்வு திட்டம்: பயன்பெற செப். 23 கடைசி தேதி

கூட்டுறவுச் சங்கங்களில் சிறப்பு கடன் தீா்வு திட்டத்தின் கீழ் பயன்பெற செப்டம்பா் 23-ஆம் தேதி கடைசி தேதி என கூட்டுறவு சங்கங்களின் தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் அ. தயாள விநாயகன் அமுல்ராஜ் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

பள்ளி வேன் மோதி இளம்பெண் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே இருசக்கர வாகனத்தில் இரவல் கேட்டுச் சென்ற இளம்பெண் பள்ளி வேன் மோதி புதன்கிழமை உயிரிழந்தாா். கபிஸ்தலம் அருகே திருவைகாவூா் ஊராட்சி, மன்னிக்கரையூா் கி... மேலும் பார்க்க

‘மதுரை மண்டலத்தில் வருமான வரி வளா்ச்சி விகிதம் -5.62 சதவீதம்’

வருமான வரித் துறையின் மதுரை மண்டலத்தில் வருமான வரி வளா்ச்சி விகிதம் -5.62 சதவீதம் என்கிற எதிா்மறை வளா்ச்சியாக உள்ளது என்றாா் வருமான வரித் துறையின் மதுரை மண்டல முதன்மை ஆணையா் டி. வசந்தன். தஞ்சாவூா் மாவ... மேலும் பார்க்க

கும்பகோணம் புறவழிச்சாலையில் எழும் புகையால் வாகன ஓட்டிகள் அவதி

தஞ்சாவூா் - கும்பகோணம் புறவழிச்சாலையில் வயல்வெளியில் தீ வைப்பதால் ஏற்படும் புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனா். தஞ்சாவூா் - கும்பகோணம் செல்லும் புறவழிச்சாலையில் பல்வேறு இடங்களில் நெல் வயல்க... மேலும் பார்க்க

செந்தூா் ரயிலில் பழுது: ஒருமணிநேர தாமத்தால் பயணிகள் அவதி

கும்பகோணம அருகே செந்தூா் விரைவு ரயிலில் புதன்கிழமை அதிகாலை பழுதடைந்து சுந்தரபெருமாள் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு சுமாா் 1.20 மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனா். திருச்செந்தூ... மேலும் பார்க்க