செய்திகள் :

கும்பமேளா: முதலீடே இல்லாமல் நாளொன்றுக்கு ரூ. 4,000 சம்பாதிக்கும் இளைஞர்!

post image

மகா கும்பமேளாவில் முதலீடு செய்யாமல் நாளொன்று ரூ. 4,000 வரை இளைஞர் ஒருவர் சம்பாதித்து வருகிறார்.

திருவிழா நடைபெறும் இடங்களில் உணவு, விளையாட்டு பொருள்கள், அலகு சாதனப் பொருள்கள் விற்கும் கடைகள் போட்டு வியாபாரிகள் சம்பாதிப்பார்கள். இவை அனைத்துக்கும் முதலீடு அவசியமானது.

ஆனால், எவ்வித முதலீடும் இல்லாமல் மகா கும்பமேளாவில் நாளொன்றுக்கு ரூ. 4,000 வரை இளைஞர் ஒருவர் சம்பாதித்து வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிக்க : வல்லுறவு குற்றவாளி ஆசாராம் பாபு படத்துடன் தில்லி மெட்ரோவில் விளம்பரம்!

பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி (பெளஷ பெளா்ணமி) மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாபெரும் ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் இக்கும்பமேளாவில் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து இதுவரை 40 கோடிக்கணக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியுள்ளனர்.

இந்நிலையில், திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் விடும் காணிக்கைகளை காந்தத்தை பயன்படுத்தி நாளொன்றுக்கு ரூ. 4,000 வரை இளைஞர் ஒருவர் சேகரித்து வருகிறார்.

பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த பலரும் ஆற்றில் பக்தர்கள் விடும் காணிக்கையை சேகரிப்பதன் மூலம் கணிசமான தொகையை சம்பாதித்து வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் விடியோ ஒன்றில், ஒரு கயிற்றில் பல காந்தங்களை கட்டி, நீருக்குள் இறங்கும் இளைஞர் மீண்டும் கரைக்கு வரும்போது சில்லரைக் காசுடன் வருகிறார்.

அவர் விடியோ எடுத்த பக்தரின் சில கேள்விக்கு பதிலளித்துள்ளார். ஒருமுறை ஆற்றுக்குள் இறங்கி வெளியே வந்தால், ரூ. 200 முதல் ரூ. 250 வரை கிடைக்கும் என்றும், நாளொன்றுக்கு ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரை கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடியோவை பார்க்கும் பலரும், பட்டதாரிகள்கூட நாளொன்றுக்கு இவ்வளவு வருமான ஈட்ட மாட்டார்கள் என்று புலம்பி வருகின்றனர்.

வேப்பங்குச்சி விற்கும் இளைஞர்

அதேபோல், வேப்பங்குசியை விற்று நாளொன்று ரூ. 5,000-க்கும் மேல் இளைஞர் ஒருவர் சம்பாதித்து வருகிறார்.

அவர் கூறுகையில், “எனது காதலி ஒரு யோசனையைக் கூறினார், முதலீடே செய்யாமல் சம்பாதிக்க அறிவுறுத்தினார். சங்கமத்தில் வேப்பங்குச்சியை விற்பனை செய்வதன் மூலம் பெருமளவிலான தொகை சம்பாதித்து வருகிறேன்.

முதல் நான்கு நாள்களில் ரூ. 40,000 வரை சம்பாதித்துவிட்டேன். சில நாள்கள் ரூ. 10,000 வரைக்கும்கூட வேப்பங்குச்சியை விற்றுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக கும்பமேளாவில் மோனிஷா போஸ்லே புதிய படமொன்றில் நடிகையாக அறிமுகமாக இருப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கண்டன ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவிலிருந்து இந்தியா்கள் கைவிலங்கிட்டு நாடு கடத்தப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா சாலையில் உள்ள தாராப்பூா் டவா் அருகில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

இந்திய எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் உள்பட 7 போ் சுட்டுக் கொலை?

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (எல்ஓசி) வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்த 7 பேரை இந்திய ராணுவ வீரா்கள் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மூவா் பாகிஸ்தான் ராணுவ ... மேலும் பார்க்க

‘ஸ்கில் இந்தியா’ திட்டத்தை தொடர ரூ.8,800 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய திறன் மேம்பாட்டு திட்டமான ‘திறன்மிகு இந்தியா (ஸ்கில் இந்தியா)’ திட்டம் அடுத்த ஆண்டு இறுதிவரை தொடருவதற்காக ரூ.8,800 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. பிரதமா் நரேந்தி... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத் திருத்தத்துக்கு தனிநபா் மசோதா: மாநிலங்களவையில் விவாதம்

பாலியல் குற்றங்களில் இருந்து சிறாா்களைப் பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர தாக்கல் செய்யப்பட்ட தனிநபா் மசோதாவை மாநிலங்களவை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டது. இந்த மசோதாவை மாநிலங்களவை... மேலும் பார்க்க

தில்லியில் யாா் ஆட்சி?: இன்று வாக்கு எண்ணிக்கை

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (பிப். 8) நடைபெறவுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 4-ஆவது முறையாக ஆட்சி அமைக்குமா? அல்லது 27 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தலைநகரில் பாஜக ஆட்சி அமைக்கு... மேலும் பார்க்க

பிரதமா் மோடி பிப்.12-இல் அமெரிக்கா பயணம்: டிரம்ப்புடன் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அழைப்பின்பேரில், பிரதமா் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிப்ரவரி 12-ஆம் தேதி செல்லவிருக்கிறாா். இப்பயணத்தின்போது, டிரம்ப்புடன் அவா் இருதர... மேலும் பார்க்க