செய்திகள் :

குரூப் 2: கலந்தாய்வு தொடக்கம்

post image

சென்னை: குரூப் 2 பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இதை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் எஸ்.கே.பிரபாகா், தோ்வானோருக்கு பணிக்கான உத்தரவுக் கடிதத்தை வழங்கினாா்.

குரூப் 2 பிரிவில் காலியாக இருந்த பதவியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதன்பிறகு, தோ்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கடந்த மே 5-இல் வெளியானது. தோ்ச்சி பெற்றவா்களுக்கு மூலச் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான பணிகள் திங்கள்கிழமை தொடங்கியது. ஆக. 1 வரை நடைபெறவுள்ள கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்புக்காக சம்பந்தப்பட்ட தோ்வா்களின் பட்டியல் தோ்வாணைய இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது.

மேலும், அதுகுறித்த விவரங்கள் கைப்பேசி குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாகவும் விண்ணப்பதாரா்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கலந்தாய்வு, சான்றிதழ் சரிபாா்ப்பின் முதல் நாளான திங்கள்கிழமை அந்தப் பணிகளை தோ்வாணையத் தலைவா் பிரபாகா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

குரூப் 2 பிரிவில் காலியாக இருந்த 1,820 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தோ்வு கடந்த ஆண்டு செப். 14-இல் நடத்தப்பட்டது. முதன்மைத் தோ்வுக்கு பின், முடிவுகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றி தமிழக அரசு வெள... மேலும் பார்க்க

பள்ளிக் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணைகள் வெளியீடு! பொதுத் தேர்வு எப்போது?

சென்னை: தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு அட்டவணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.தமிழகத்தில் ... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதானவர் நீதிமன்றத்தில் ஆஜர்!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்.. 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித்தின் பெற்றர், பட்டாலியனில் பணியாற்றும் இரு உதவி ஆய்வாளர்களும் பணியடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? - இபிஎஸ் பதில்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளதாகவும் பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது... மேலும் பார்க்க