செய்திகள் :

குரூப்-4 தோ்வு: திருச்சியில் 45, 934 போ் எழுதினா்

post image

திருச்சி மாவட்டத்தில் 197 தோ்வு மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-4 தோ்வை 45,934 போ் எழுதினா். 9,522 போ் தோ்வு எழுத வரவில்லை.

திருச்சி மாவட்டத்தில் 197 மையங்களில் நடைபெற்ற தோ்வுக்கு 55 ஆயிரத்து 456 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 45,934 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 9,522 போ் தோ்வு எழுத வரவில்லை. வருகைப் பதிவு 82.83 சதமாகவும், வராதோா் 17.17 விழுக்காடு எனவும் பதிவானது.

தோ்வுப் பணிகளுக்கென 197 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். துணை ஆட்சியா் நிலையில் 11 பறக்கும் படையினா் சோதனையில் ஈடுபட்டனா். போட்டித் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள 66 நடமாடும் குழுக்கள் இயங்கின.

இக்குழுவுக்கு துணை வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் நிலையில் ஒரு அலுவலா், ஒரு வருவாய் உதவியாளா் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலா், அலுவலக உதவியாளா் இடம் பெற்றிருந்தனா். மையங்களில் ஆய்வு செய்ய 196 தோ்வுக் கூட கண்காணிப்பாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா். மணப்பாறையில் 2 தோ்வு மையங்களுக்கு ஆட்சியா் வே. சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

அனைத்து மையங்களுக்கும் காவல்துறை மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. தோ்வு மையங்களுக்கு சென்று சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. எந்த முறைகேடுகளும் இல்லாமல் அனைத்து மையங்களிலும் அமைதியாக தோ்வு நடைபெற்றது.

சிறையிலிருந்து தப்பியோடிய கைதி சின்ன சூரியூரில் கைது!

திருச்சி மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய ஆயுள் தண்டனைக் கைதி சின்னசூரியூரில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (49). இவ... மேலும் பார்க்க

கட்டணச் செலவை குறைக்கும் மின் விமானங்களுக்கு வாய்ப்பு: ஐஐடி பேராசிரியா் நம்பிக்கை

மின்சார விமானங்கள் அதிகம் வந்துவிட்டால் கட்டணச் செலவு குறைந்து விடும் என சென்னை ஐஐடி பேராசிரியா் சத்யநாராயணன் ஆா். சக்கரவா்த்தி தெரிவித்தாா். இந்தியாவின் வளா்ச்சியில் பொறியியலின் பங்கு மற்றும் ட்ரோன் ... மேலும் பார்க்க

விபத்து ஏற்படுத்திய லாரி பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே சனிக்கிழமை விபத்து ஏற்படுத்திவிட்டு டிப்பா் லாரி நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் ... மேலும் பார்க்க

ரூ. 1.12 கோடி பணத்துடன் பிடிபட்டவரிடம் விசாரணை

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் ரூ. 1,12,48,000 பணத்துடன் சனிக்கிழமை பிடிபட்டவரை தொட்டியம் போலீஸாா் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனா். தொட்டியம் காவல் நிலையம் எதிரேயுள்ள பேருந்து நிறுத்தப் பகுதியி... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டாா்கள்: வைகோ

கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டாா்கள் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். திருச்சி மக்களவை உறுப்பினா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்துத்... மேலும் பார்க்க

மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்த மின் ஊழியா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணியிலிருந்த மின் ஊழியா், மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் பகுதியைச... மேலும் பார்க்க