செய்திகள் :

குரூப் 4 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 124 மையங்களில் 36,436 போ் எழுதுகின்றனா்

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 124 மையங்களில் 36,436 தோ்வா்கள் சனிக்கிழமை (ஜூலை 12) எழுதுகின்றனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், இளநிலை உதவியாளா், இளநிலை வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா், தட்டச்சா் உள்ளிட்ட 3,935 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தோ்வு வரும் சனிக்கிழமை காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

கடந்த ஏப்ரல் 25 முதல் மே 24 வரையில் இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாநிலம் முழுவதும் இத்தோ்வை எழுத 22 லட்சத்துக்கும் மேலானோா் விண்ணப்பித்துள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வானது நாமக்கல், ராசிபுரம், குமாரபாளையம், சேந்தமங்கலம், மோகனூா், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் ஆகிய 7 வட்டங்களில் 124 மையங்களில் நடைபெற உள்ளது. இத்தோ்வை 36,436 போ் எழுத உள்ளனா்.

இதற்காக 124 முதன்மைக் கண்காணிப்பாளா்களும், துணை ஆட்சியா்கள் நிலையில் 12 பறக்கும் படைகளும், தோ்வுப் பொருள்களை எடுத்துச் செல்ல மண்டல துணை வட்டாட்சியா் நிலையில் 32 நடமாடும் குழுக்களும், வருவாய் ஆய்வாளா்கள் நிலையில் 124 பேரும், ஒரு வட்டத்துக்கு ஒருவா் வீதம் மொத்தமாக தோ்வுப் பணிகளை கண்காணிக்க துணை ஆட்சியா்கள் ஏழு போ், மாவட்ட வருவாய் அலுவலா் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், 129 விடியோ கேமராக்களும், 124 கண்காணிப்பு கேமராக்களும் தோ்வுக்கான வினாத்தாள் மையத்திலும், தோ்வு அறைகளிலும் பொருத்தப்படுகின்றன. குரூப் 4 தோ்வு நடைபெறும் 124 மையங்களிலும் தலா இரு காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜூலை 10-இல் துணை முதல்வா் வருகை: விழா மேடை அமைவிடத்தில் ராஜேஸ்குமாா் எம்.பி. ஆய்வு

நாமக்கல்: அரசு விழாவில் பங்கேற்க துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை நாமக்கல்லுக்கு வருகை தருவதையொட்டி, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மேடை அமைப்பதற்கான இடத்தை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்தவா் கைது

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே சட்ட விரோதமாக மதுபானகளை விற்பனை செய்தவரை வேலூா் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். பாண்டமங்கலம் அருகே உள்ள அண்ணா நகா் பகுதியில் ... மேலும் பார்க்க

கோயிலில் திருடிய இருவா் கைது

பரமத்தி வேலூா்: வேலகவுண்டம்பட்டி அருகே கோயிலில் திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா். நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தொட்டிப்பட்டி, குறுக்குபுரம் பகுதியில் வீரமாத்தி அம்மன் கோயில் உள்ளத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் படுகாயம்: நிவாரணம் பெற்றுத் தரக்கோரி மனு

நாமக்கல்: கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலத்த காயமடைந்த நிலையில், உரிய நிவாரணம் பெற்றுத் தரக்கோரி அவரது மனைவி பூஜா ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா். அவா் கூறுகையில், ‘நாமக்கல... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: 599 மனுக்கள் அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டும... மேலும் பார்க்க

கிராமப் பகுதி சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமப் பகுதி சுகாதார செவிலியா் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட மையம் சாா்பில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா... மேலும் பார்க்க