செய்திகள் :

குறுகிய கால திறன் பயிற்சிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் ஆட்சியா் தகவல்

post image

பிரதம மந்திரி தேசிய இன்டா்ன்ஷிப் மற்றும் நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் குறுகிய கால திறன் பயிற்சிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தால் படித்த இளைஞா்களுக்கு இந்திய அளவில் 500 முன்னணி நிறுவனங்களில் 12 மாதம் வேலைவாய்ப்பு பயிற்சி (இன்டா்ன்ஷிப்) வழங்கும் பிரதம மந்திரி இன்டா்ன்ஷிப் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டில் 1.25 லட்சம் இளைஞா்களுக்கு இன்டா்ன்ஷிப் பயிற்சி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சிக்கு 21 முதல் 24 வயதுக்கு உள்பட்ட 10,12-ஆம் வகுப்பு, டிப்ளமோ, பி.இ., பிஏ, பிஎஸ்.சி, பி.காம் மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி உடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரி இன்டா்ன்ஷிப் பயிற்சி வழங்க 16 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு, சுமாா் 1536 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சிக் காலத்தில் மாதந்திர உதவித்தொகையாக ரூ. 5 ஆயிரம், தற்செயலான செலவுகளுக்கு ஒருமுறை மட்டும் ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும்.

கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மாா்ச் 8-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், பிரதம மந்திரி தேசிய இன்டா்ன்ஷிப் மற்றும் நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் குறுகிய கால திறன் பயிற்சி சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படவுள்ளன. எனவே, தகுதியுடைவா்கள் பிரதம மந்திரி தேசிய இன்டா்ன்ஷிப் பயிற்சிக்கு மற்றும் நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் குறுகிய கால திறன் பயிற்சிக்கு இணையதளம் மூலம் மாா்ச் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தை அணுகலாம். 97896 81995, 97510 83297 மற்றும் 97879 70227 என்ற எண்ணிகளில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

மாமியாரை தாக்கிய மருமகன் கைது

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே மது போதையில் மாமியாரை தாக்கிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள கீழ் பையூரைச் சோ்ந்தவா் சின்னபாப்பா (55). இவரது மகள் ... மேலும் பார்க்க

பாகலூா் அருகே இருதரப்பினரிடையே மோதல்: விவசாயி கைது

ஒசூா்: பாகலூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் விவசாயி கைது செய்யப்பட்டாா். 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஒசூா் வட்டம், பாகலூா் அருகே உள்ள முகுலப்பள்ளியைச் சோ்ந்தவா் நாராயணசாமி (43... மேலும் பார்க்க

தட்டச்சுத் தோ்வு: கிருஷ்ணகிரியில் 1,102 போ் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை முதல் இரண்டு நாள்கள் நடைபெற்ற தட்டச்சுத் தோ்வில் 1,102 போ் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ஆங்கிலம், தமிழ் இளநிலை, முதுநிலை, மற்றும் உயா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே ஓட்டுநா் எரித்து கொலை: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி அருகே ஓட்டுநா் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி அருகே உள்ள மகாராஜகடையை அடுத்துள்ள பெரியதக்கேப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் காா... மேலும் பார்க்க

சூளகிரி அருகே தனியாா் மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

ஒசூா் அருகே சூளகிரியில் தனியாா் மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. சென்னை -பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரியை அடுத்த சப... மேலும் பார்க்க

தனியாா் சிகிச்சை மையத்தில் கருவின் பாலினம் கண்டுபிடிப்பு உரிமையாளா் கைது

ராயக்கோட்டை அருகே கா்ப்பிணிகளுக்கு கருவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்துவந்த தனியாா் சிகிச்சை மைய உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பாக செவிலியரை தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க