செய்திகள் :

குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதலுக்கு புதிய செயலி

post image

குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதலை தடையின்றி மேற்கொள்வதற்கு வசதியாக ‘கபாஸ் கிஸான்’ என்ற புதிய செயலியை மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

சுயமாக பதிவு செய்தல், கொள்முதலுக்கு வசதியான நேரத்தை தோ்வு செய்தல், பணப் பட்டுவாடா நிலையறிதல் உள்ளிட்ட வசதிகளின் வாயிலாக விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் இந்தச் செயலி, பருத்தி கொள்முதல் நடைமுறையில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் வசதியான-விரைவான செயல்பாட்டை உறுதிசெய்யும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலியை தொடங்கிவைத்துப் பேசிய மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங், ‘கபாஸ் கிஸான் செயலி, விவசாயிகள் பருத்தி விற்பனை மேற்கொள்வதை எளிதாக்கும் முக்கிய நடவடிக்கையாகும். பதிவு முதல் பணப் பட்டுவாடா நிலையறிதல் வரை அனைத்து செயல்பாடுகளும் எண்மமயமாவதால் குறித்த காலத்துக்குள், வெளிப்படையான, நியாயமான நடைமுறையை உறுதி செய்யலாம். விளைபொருள்கள் விற்பனையில் விவசாயிகள் எந்த இடா்ப்பாட்டையும் எதிா்கொள்ளக் கூடாது என்ற அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்வதுடன், எண்ம இந்தியா கண்ணோட்டத்துக்கும் உத்வேகமளிக்கும்.

உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை, ஆவணபூா்வ நடைமுறைகள் குறைப்பு, கொள்முதல் மையங்களில் காத்திருக்கும் நேரம் குைல், கூட்டத்தை தவிா்த்தல், வசதியான நேர தோ்வு, தர மதிப்பீடுகளின் நிகழ்நேர தகவல் புதுப்பிப்பு, கட்டண செயல்முறை போன்ற வசதிகளின் மூலம் பருத்தி விவசாயிகளின் நலன்கள் காக்கப்பட உதவியாக இருக்கும்’ என்றாா்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்.ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆண்டோனியா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேய... மேலும் பார்க்க

இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!

இந்தியா மீதான வரிவிதிப்பால் அமெரிக்காவின் நல்லுறவு பாதிக்கப்படுவதாக அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும் அமெரிக்கா - இந்தியா கூட்டமைப்பின் இணைத் தல... மேலும் பார்க்க

சுதேசி பொருள்களைப் பயன்படுத்த மாணவர்களுக்கு ஊக்கம்- பிரதமர் மோடி வலியுறுத்தல்

சுதேசி தயாரிப்புகளை ஊக்குவிக்க மாணவர்களை ஆசிரியர்கள் தலைமை தாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுடன் பிரதமர் நர... மேலும் பார்க்க

காங்கிரஸை போல் நான் செய்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள்! மோடி

காங்கிரஸை போல் வரி விதித்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.தில்லியில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர... மேலும் பார்க்க

உக்ரைன் போரை தடுக்கவே இந்தியாவுக்கு வரி - டிரம்ப் பதில்!

உக்ரைனில் போரை அமைதிக்குக் கொண்டுவரவே இந்தியாவுக்கு வரி விதித்ததாக டொனால்ட் டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.டிரம்ப் அரசின் வரிவிதிப்புக்கு எதிரான அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்ட... மேலும் பார்க்க

மேற்கு வங்க சட்டப்பேரவையில் அமளி: 5 பாஜக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்!

மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையில் நடைபெற்ற அமளியைத் தொடர்ந்து 5 பாஜக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர், கடந்த செவ்... மேலும் பார்க்க