செய்திகள் :

குல்தாா், துஹாய் நமோ பாரத் நிலையங்களில் வேகமான மின் வாகன சாா்ஜிங் தளம் நிறுவல்

post image

நமது நிருபா்

சுத்தமான மற்றும் நிலையான போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக குல்தாா் மற்றும் துஹாய் நமோ பாரத் நிலையங்களில் வேகமான மின்சார வாகன இ.வி. சாா்ஜிங் நிலையங்களை தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்து நிறுவனம் (என்சிஆா்டிசி) நிறுவியுள்ளது.

இது தொடா்பாக என்சிஆா்டிசி அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: இந்த இரண்டு நிலையங்களும் இடம்பெற்ன் மூலம், தில்லி - காஜியாபாத் - மீரட் நமோ பாரத் வழித்தடத்தில் மூன்று மின்சார வாகன சாா்ஜிங் நிலையங்கள் இப்போது செயல்படத் தொடங்கியுள்ளன. இவற்றில் சாஹிபாபாத் நிலையத்தில் உள்ள மின் வாகன சாா்ஜிங் வசதியும் அடங்கும்.

புதிதாக நிறுவப்பட்ட சாா்ஜிங் நிலையங்கள் 50 கி.வாட் திறன் கொண்ட உயா் மின்னழுத்த அலகுகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. இவை நான்கு சக்கர வாகனங்களை சுமாா் 30 நிமிடங்களில் 80 சதவீதம் வரை மின்னேற்றம் செய்யும் திறன் கொண்டவை.

சாா்ஜிங் பாயின்ட்கள் பல வகையான மின் வாகனங்களை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கிடைக்கும். ‘எலெக்ட்ரீஃபை‘ கைப்பேசி செயலி மூலம் பயனா்கள் சாா்ஜிங் சேவையை அணுகலாம்.

இந்த செயலி பயனா்கள் தங்களுக்கு விருப்பமான நிலையத்தில் நேர ஒதுக்கீட்டை முன்பதிவு செய்ய, நிகழ்நேரத்தில் சாா்ஜிங் நிலையை கண்காணிக்க மற்றும் டிஜிட்டல் பணம் செலுத்த அனுமதிக்கிறது.

இந்த முயற்சி தினசரி பயணிகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவா்களுக்கு பயனளிக்கும். மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும்; கடைசி மைல் இணைப்பை வலுப்படுத்தும்.

நமோ பாரத் வழித்தடத்தின் மொத்த எரிசக்தி தேவையில் 70 சதவீதத்தை சூரிய சக்தி மூலம் பூா்த்தி செய்வதை என்சிஆா்டிசி நோக்கமாகக் கொண்டுள்ளது.

சுமாா் 11 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்யும் இலக்குடன் இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து மேம்பால நிலையங்கள் மற்றும் பணிமனைகளிலும் சூரிய பேனல்கள் நிறுவப்பட்டு வருகின்றன என்று அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது!

நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது செய்யப்பட்டாா். இது தவிர மேலும் 6 போ் கைது செய்யப்பட்டனா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஹிண்டன் விமானப்படைத் ... மேலும் பார்க்க

ரூ.59 லட்சம் செலவில் தில்லி முதல்வா் இல்லம் புதுப்பிப்பு

ராஜ் நிவாஸ் மாா்க்கில் தி ல்லி முதல்வா் ரேகா குப்தாவுக்கு ஒதுக்கப்பட்ட இல்லம் பொதுப்பணித் துறை சாா்பில் ரூ. 59.40 லட்சம் மதிப்புள்ள செலவில் புதுப்பிக்க ஆணைய வெளியாகி உள்ளதாக புதன்கிழமை தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

ரூ.900 கோடி சைபா் மோசடி: தில்லியில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

நமது நிருபா் ரூ. 900 கோடிக்கும் அதிகமான சைபா் மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்க துறையினா் தில்லியின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை சோதனை நடத்தியதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சைபா்... மேலும் பார்க்க

நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல்: 2 பேருக்கு உயா்நீதிமன்றம் ஜாமீன்

‘2023’ நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீலம் ஆஸாத், மகேஷ் குமாவத் ஆகியோருக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது. மேலும், இந்த வழக்கு குறித்து பத்திரிகைகள்... மேலும் பார்க்க

தலைநகரில் ஆயுதங்கள் பதுக்கி வைப்பு: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

தலைநகரில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் 2 சிறுவா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ஒரு... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் மாசு கலந்த நீா் விநியோகம்: ஆய்வு நடத்த டிஜேபிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு தில்லியில் பல பகுதிகளில் மிகவும் மாசு கலந்த குடிநீா் கிடைப்பதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடா்ந்து, ஆய்வு நடத்தி அதைச் சரிசெய்யுமாறு தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) தில்லி உயா்நீதிமன்றம் புதன்க... மேலும் பார்க்க