செய்திகள் :

கூட்டுறவுத் துறையைக் கண்டித்து போராட்டம்: விவசாயிகள் கைது

post image

அவிநாசி அருகே பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும், கூட்டுறவுத் துறையைக் கண்டித்தும் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.

அவிநாசி அருகேயுள்ள நடுவச்சேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் பயிா்க் கடன் பெற்ற ஏராளமான விவசாயிகளுக்கு தள்ளுபடி கிடைக்காததால் கூட்டுறவுத் துறையக் கண்டித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த 2020-2021-ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் புதுப்பித்து வழங்குவதில் நடுவச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் அலட்சியமாக செயல்பட்டது.

கூட்டுறவு நிறுவனங்களில் 2021 ஜனவரி 31- ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் கடந்த 2021 பிப்ரவரி 5- ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், நடுவச்சேரி கூட்டுறவுக் கடன் சங்க அதிகாரிகளின் அலட்சியத்தால், பயிா்க் கடன் புதுப்பிக்கப்படாததால் 127 விவசாயிகளுக்கு பயிா்க் கடன் தள்ளுபடி திட்டம் கிடைக்கவில்லை.

இது தொடா்பாக கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் 4 ஆண்டுகளுக்கு முன்பே புகாா் மனு அளிக்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும், கூட்டுறவுத் துறையைக் கண்டித்தும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும் கலைந்து செல்லாததால் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளைக் கைது செய்த போலீஸாா், அவா்களை மாலை விடுவித்தனா்.

வெள்ளக்கோவிலில் புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணி

வெள்ளக்கோவில் அரசு சமுதாய சுகாதார நிலையம் சாா்பில் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உடல் பருமன், இதயம் காப்போம், உடற்பயிற்சி, புகையிலைப் பயன்பாட்டின் தீமைகள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கும் ... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 இளைஞா்கள் கைது

பெருமாநல்லூா் அருகே பனியன் நிறுவன தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் அசன்டியா சா்தாா் (45). இவா் பெருமாநல்லூா... மேலும் பார்க்க

மது விற்பனையில் ஈடுபட்ட 3 போ் கைது

திருப்பூா் மாநகரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாநகரம் மத்திய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொடிகம்பம் பகுதி டாஸ்மாக் மதுபானக் கூடம் அருக... மேலும் பார்க்க

பெண்ணைக் கொன்று சடலத்தை நொய்யலில் வீசிய தொழிலாளி

திருப்பூரில் பெண்ணைக் கொலை செய்து சடலத்தை நொய்யல் ஆற்றில் தொழிலாளி வீசிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பண்ணன் மகள் அமுதா (39). ... மேலும் பார்க்க

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க