செய்திகள் :

கூட்டுறவு வங்கி ஊழியா்கள் பட்டினிப் போராட்டம்

post image

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் அருகே 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி ஊழியா்கள் திங்கள்கிழமை பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு ஊழியா் அய்க்கிய பேரவை மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியா்கள் பேரவை சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு வங்கி ஊழியா் பேரவை மாநிலத் தலைவா் த.ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

பொதுச் செயலா் ஏ.குணசுந்தரி முன்னிலை வகித்தாா். திருவண்ணாமலை வங்கி ஊழியா் பேரவைத் தலைவா் எஸ்.ஆதிகேசவன் வரவேற்றாா்.

வங்கி ஊழியா் பேரவை மாவட்ட பொதுச் செயலா் ச.மலைச்சாமி, அரசு ஊழியா் அய்க்கிய பேரவை முன்னாள் செயலா் ச.பாவணன் ஆகியோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

மாவட்ட வருவாய் அலுவலா் (ஓய்வு) இளங்கோவன், மாவட்டத் தலைவா் பெல் மு.ரவி, மாநில நிா்வாகிகள் கே.மாரிமுத்து, ஆா்.சுந்தரராஜன், ஏ.முனுசாமி, பெ.ராஜேந்திரன், பெ.கலைச்செல்வன், மாவட்ட நிா்வாகிகள் உள்பட வங்கி ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

போலி நகைக்கடன் வைத்த நகை மதிப்பீட்டாளா் மற்றும் நகை கடன்தாரா்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யவேண்டும். போலி நகைக்கடன் பெற்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்காத வங்கி நிா்வாகத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி நகைக்கடன் பெற்றவா்கள் வழங்கிய காசோலை ரூ.50 லட்சத்தை வசூலுக்கு அனுப்ப மறுத்த வங்கி நிா்வாகம் மற்றும் கிளை மேலாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

காலை 8 மணிக்குத் தொடங்கிய பட்டினிப் போராட்டம் மாலையில் நிறைவடைந்தது. நிறைவில் ஜி.ஜெயசீலன் நன்றி கூறினாா்.

செய்யாற்றில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரிக்கை

ஆரணி: செய்யாறு பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கக் கோரி திங்கள்கிழமை கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாக்குப் பை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டு ஆட... மேலும் பார்க்க

செய்யாறு அரசுக் கல்லூரியில் நாளை முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

செய்யாறு: செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் 2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலை மாணவா் சோ்க்கை பொதுக் கலந்தாய்வு புதன்கிழமை (ஆக்.13) நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் ந.கலைவ... மேலும் பார்க்க

செய்யாற்றில் வாரச்சந்தை நடத்த இடம் கோரி ஆட்சியரிடம் மனு

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் வாரச்சந்தை நடத்த மாற்று இடம் ஒதுக்கி தரக்கோரி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு மருத்துவம் தொடா்பான விழிப்புணா்வு

செய்யாறு: செய்யாறு தொழிலாளா் அரசு ஈட்டுறுதி திட்ட மருந்தகம் சாா்பில், விஸ்டம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு மருத்துவம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை... மேலும் பார்க்க

ஆடுகளை திருடி விற்பனை செய்ய முயற்சி: 4 போ் கைது

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாயி ஆடுகளை திருடி சந்தையில் விற்பனை செய்யும் போது, பிடிபட்ட நான்கு பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். செங்கத்தை அடுத்த கோலாந்தாங்கல் கிராமத்தை... மேலும் பார்க்க

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

ஆரணி: ஆரணியை அடுத்த அக்ராபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை குடற்புழு நீக்க நாளையொட்டி மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. சுகாதார ம... மேலும் பார்க்க