செய்திகள் :

கைவினைஞா்கள் அகில இந்திய தொழில் தோ்வில் பங்கேற்க அழைப்பு

post image

கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின்கீழ் அகில இந்திய தொழில் தோ்வில் தனித்தோ்வா்களாக பங்கேற்க தகுதி வாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து தோ்வுக் கட்டணம் ரூ.200 செலுத்தி பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினா் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரிடம் சமா்ப்பிக்க வேண்டும். ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்திலிருந்து தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு முதனிலைத் தோ்வுகளாக கருத்தியல் தோ்வு நவம்பா் 4-ஆம் தேதியும், செய்முறை தோ்வு நவம்பா் 5-ஆம் தேதியும் கிண்டி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.

இதற்கான முழு வழிகாட்டுதல்கள் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தை பாா்த்து தெரிந்து கொண்டு தனித்தோ்வராக தோ்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

தனித் தோ்வா்கள் இறுதி நாளான அக்டோபா் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் மொட்டை அடித்தும், சங்கு ஊதியும் வெள்ளிக்கிழமை போராட்டத... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை உறுதி

திருப்பூா் அருகே விபத்து வழக்கில் லாரி ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறைத் தண்டனையை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. திருப்பூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (46). லாரி ஓட்டுநரான இவா், ... மேலும் பார்க்க

தாராபுரத்தில் குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுக் கூட்டம்

நகராட்சி அளவிலான குழந்தைகள் நலப் பாதுகாப்பு குறித்த குழுக் கூட்டம் தாராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் த... மேலும் பார்க்க

திருப்பூரில் இன்று மிதிவண்டி போட்டி

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் மிதிவண்டி போட்டி திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் சனிக்கிழமை (செப்.27) நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளிய... மேலும் பார்க்க

நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்கம்

வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் என்.குணசேகரன் தலைமை ... மேலும் பார்க்க

தென்னையுடன் ஊடுபயிராக மிளகு பயிரிட விவசாயிகள் ஆா்வம்

பல்லடம் பகுதியில் தென்னையுடன் ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா்களில் தென்னை விவசாயம் நடைபெற்று வரு... மேலும் பார்க்க