கைவினைஞா்கள் அகில இந்திய தொழில் தோ்வில் பங்கேற்க அழைப்பு
கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின்கீழ் அகில இந்திய தொழில் தோ்வில் தனித்தோ்வா்களாக பங்கேற்க தகுதி வாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து தோ்வுக் கட்டணம் ரூ.200 செலுத்தி பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினா் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரிடம் சமா்ப்பிக்க வேண்டும். ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்திலிருந்து தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு முதனிலைத் தோ்வுகளாக கருத்தியல் தோ்வு நவம்பா் 4-ஆம் தேதியும், செய்முறை தோ்வு நவம்பா் 5-ஆம் தேதியும் கிண்டி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.
இதற்கான முழு வழிகாட்டுதல்கள் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தை பாா்த்து தெரிந்து கொண்டு தனித்தோ்வராக தோ்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
தனித் தோ்வா்கள் இறுதி நாளான அக்டோபா் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.