செய்திகள் :

கைவிரித்த சேகர் பாபு; போராடிவந்த தூய்மைப் பணியாளர்கள் கைது - சென்னையில் பரபரப்பு!

post image

தனியார் மயமாக்கலை எதிர்த்தும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக இன்றும் காலை முதலே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மறுபக்கம், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், மக்கள் சிரமத்துக்குள்ளாவதாகவும் தாக்கல் செய்யப்பட பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், போராட்டக்காரர்கள் களைந்து செல்லுமாறும், காவல்துறை போராட்டக்காரர்களை சட்டத்திற்குட்பட்டு முறையாகக் கைது செய்யுமாறும் உத்தரவிட்டது.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

அதற்கேற்றாற்போல, போலீஸாரும் ரிப்பன் மாளிகைக்கு வெளியே குவிக்கப்பட்டனர். காலி பேருந்துகளும் தயார் நிலையில் வரவழைக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து, மாலை நான்கு மணியளவில் அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர் பாபு உள்ளிட்ட அரசுத் தரப்பு குழு, போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடையவே போராட்டம் தொடர்ந்து நீடித்தது.

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

இத்தகைய சூழலில்தான், இரவு 10 மணியளவில் அமைச்சர் சேகர்பாபு ரிப்பன் மாளிகைக்கு வந்தார்.

அடுத்த ஒரு மணிநேரத்தில் 11 மணியளவில் போலீஸார் அங்கிருந்த போராட்டக்காரர்களைக் கைதுசெய்யத் தொடங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கெதிராக கோஷமிட்டபோதும் போலீஸார் வலுக்கட்டாயமாக அவர்களைக் கைதுசெய்து பேருந்தில் ஏற்றினர்.

இறுதியில் மொத்த கூட்டமும் போலீஸாரால் கலைக்கப்பட்டது. கைதுசெய்யப்பட்டவர்கள் சென்னைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகிறது.

OPS: "தமிழ்நாடு புறவழிச் சாலைகளிலும் சுங்க கட்டணமா?" - திமுக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு

தமிழ்நாட்டு புறவழிச் சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முடிவை எடுத்துள்ள தி.மு.க அரசை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்... மேலும் பார்க்க

RN Ravi: "ஆளுநர் ரவிக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு?" - கனிமொழி எம்.பி கேள்வி

நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தனது பேச்சில் ஆளும் திமுக அரசின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளில் முக்கியமான ஒன்று, தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரி... மேலும் பார்க்க

மோடியின் சுதந்திர தின உரை: "தான் ஒரு RSS தயாரிப்பு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறார்" - திருமா

டெல்லி செங்கோட்டையில் இந்தியாவின் 79-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பிரதமர் மோடியின் கொடியேற்றத்துடன் இன்று நடைபெற்றது.அப்போது பிரதமர் மோடி தனது உரையில், 1948, 1975-77, 1992 என மூன்று முறை மத்திய அ... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டிற்கு இதைக் கொண்டு வராமல், புதிய விமான நிலையங்கள் திறந்து என்ன பயன்?" - டி.ஆர்.பி. ராஜா

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிற்குக் கடிதம் எழுதியுள்ளார். அதை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில்... "மத்திய விமானப் ப... மேலும் பார்க்க

தூய்மைப் பணி: "11 மண்டலங்களை தனியார்மயமாக்கியது அதிமுக; அதற்கு அதிமுகவின் பதில் என்ன?" - திருமா

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாள்களாக தனியார்மயமாதலை எதிர்த்தும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை, உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஆகஸ்ட் 13-ம் தேதி நள... மேலும் பார்க்க

புதுச்சேரி: "தனிநபர் வருமானம் ரூ. 3,02,680 லட்சமாக உயர்வு" - முதல்வர் ரங்கசாமி சுதந்திர தின உரை

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாண்டிச்சேரி கடற்கரைச் சாலையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் முதல்வர் ரங்கசாமி.தொடர்ந்து பேசிய அவர், `... மேலும் பார்க்க