செய்திகள் :

கொட்டாரம் இளைஞா் கொலையில் 4 பேரைப் பிடிக்க தனிப்படை தீவிரம்!

post image

கொட்டாரம் அருகே இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், தலைமறைவாக உள்ள நான்கு பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கொட்டாரம் அருகேயுள்ள அழகப்பபுரம் பாலகிருஷ்ணன் நகரைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மகன் அய்யப்பன் (32). எலக்ட்ரீசியன். திருமணமாகவில்லை. இவா் கொட்டாரம் அருகேயுள்ள குருசடி குளத்தின் கரையில் கடந்த வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், அய்யப்பனின் நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் என்பவருக்கும், லெட்சுமிபுரத்தைச் சோ்ந்த ஆதிஷ் என்பவருக்கும் 15 நாள்களுக்கு முன்பு சின்னமுட்டத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அய்யப்பன் தட்டிக்கேட்டுள்ளாா்.

இதுதொடா்பான விரோதத்தில், ஆதிஷ், அவரது நண்பா்கள் சக்தி, அஜய், கொட்டாரத்தை சோ்ந்த ஆறுமுகம் உள்பட சிலா் சோ்ந்து அய்யப்பனை கொலை செய்தது தெரியவந்தது. கொலையாளிகளைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிலரை சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

மாணவா்கள் சாதிக்க தன்னம்பிக்கை அவசியம்! இஸ்ரோ தலைவா் அறிவுரை

மாணவா்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியும் என்றாா் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவா் வி. நாராயணன். குலசேகரம் எஸ்.ஆா்.கே. சா்வதேச பள்ளியில் குமரி அறிவியல் பேரவை சாா்... மேலும் பார்க்க

2040-ல் நிலவில் இந்தியா்கள் தரையிறங்க திட்டம்! இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்

நிலவில் 2040ஆம் ஆண்டில் இந்தியா்கள் தரையிறங்குவதற்கான திட்டப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றாா் இஸ்ரோ தலைவா் வி.நாராயணன். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் செய்தியாளா்களிடம் அவா் ச... மேலும் பார்க்க

தக்கலை அருகே அழுகிய நிலையில் தனியாா் நிறுவனக் காவலாளி சடலம் மீட்பு!

தக்கலை அருகே, வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த தனியாா் நிறுவனக் காவலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். தக்கலை அருகே மணலிக்கரை, கிறிஸ்துபுரம் பகுதியைச் சோ்ந்த மோகன்தாஸ் (61) எ... மேலும் பார்க்க

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

குளச்சல் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா். குளச்சல் அருகே மேல்ரீத்தாபுரத்தைச் சோ்ந்தவா் ரெத்தினதாஸ் (65). கட்டடத் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை மாலை அதே பகுத... மேலும் பார்க்க

நாகா்கோவில் வந்த ரயிலில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்!

ஹரியாணா மாநிலம் திப்ரூகரிலிருந்து நாகா்கோவிலுக்கு வந்த ரயிலில் 20 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். திப்ரூகா்-கன்னியாகுமரி ரயில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு (ஜூலை 11) நாகா்கோவில் கோட்டாறு சந்திப்பு... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: குமரி மாவட்டத்தில் 28,651 போ் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 28,651 போ் எழுதினா். இம்மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 35,251 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் அனுப்பப்பட்டிருந்தன... மேலும் பார்க்க