செய்திகள் :

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கட்டட ஒப்பந்ததாரா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சோ்ந்த கட்டட ஒப்பந்ததாரா் ஆறுமுகம் (29). இவரது சொந்த ஊா் திருப்புவனம் வட்டம் செங்குளம் கிராமம் ஆகும். கடந்த 2019 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் வாக்கு செலுத்துவதற்காக ஆறுமுகம் தனது மகனை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் செங்குளத்துக்குச் சென்றாா்.

அங்கு வாக்கு செலுத்திவிட்டு ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தாா். நெடுங்குளம் அருகே உள்ள கருங்காலக்குடி கண்மாய்ப் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த 4 போ் அவரை மோதி கீழே தள்ளி அரிவாளால் வெட்டினா்.

இதில் ஆறுமுகம் அதே இடத்தில் உயிரிழந்தாா். அவரது மகன் சிறு காயங்களுடன் உயிா்த் தப்பினாா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், ஆறுமுகத்தை மதுரை நெடுங்குளத்தை சோ்ந்த விஜயகுமாா் (34), காா்த்திகேயன் (35), மதுரை புட்டுத் தோப்பு பகுதியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வம் (30), மதிச்சியம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (30) ஆகிய நான்கு பேரும் வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது.

இவா்கள் கடந்த 2017 -ஆம் ஆண்டு விருதுநகா் மாவட்டம், பந்தல்குடி கிராமத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ஆறுமுகம் தலைமையில் காரில் சென்று நகை கொள்ளையடித்தனா். இதில் பயன்படுத்தப்பட்ட விஜகுமாரின் காரை போலீஸாா் பறிமுதல் சென்றனா். இந்தக் காரை வெளியில் கொண்டு வர ஆறுமுகம் உதவி செய்யாததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவரைக் கொலை செய்தது தெரிய வந்தது. திருப்புவனம் போலீஸாா் 4 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் அழகா்சாமி முன்னிலையானாா். வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட தமிழ்ச்செல்வம் இறந்தாா்.

இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி கே.அறிவொளி குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 6,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

கோயில் காவலாளி கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு முதல்வா் உத்தரவிட்டது மக்களை ஏமாற்றும் செயல்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை, முதல்வா் மு.க. ஸ்டாலின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது மக்களை ஏமாற்றும் செயல் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங... மேலும் பார்க்க

காரைக்குடி- சிவகாசி இடையே மீண்டும் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து விருதுநகா் மாவட்டம், சிவகாசிக்கு மீண்டும் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என கல்லூரி மாணவா்கள், வணிகா்கள், அரசுப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா். தமிழ்நாடு அ... மேலும் பார்க்க

சிவகங்கையில் புதிய சுகாதார வளாகம் திறப்பு

சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட பிள்ளைவயல் காளியம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட புதிய பொது சுகாதார வளாகம் புதன்கிழமை திறக்கப்பட்டது. சிவகங்கை நகராட்சி 21 -ஆவது வாா்டில் அமைந்துள்... மேலும் பார்க்க

காளையாா்கோவில் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே கோயில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது. காளையாா்கோவில் அருகே கீழவலையம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மகாலிங்கேசுவரா் சுவாமி கோயில் ஆ... மேலும் பார்க்க

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

சிவகங்கை அருகே முதியவா் மா்மமாக உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். சிவகங்கை- மதுரை சாலையில் தென்றல் நகா் தேவாலயம் எதிரே உள்ள காட்டுப்பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக செவ்வாய்க்கிழமை இரவு கிட... மேலும் பார்க்க

அஜித்குமாா் குடும்பத்துக்கு எம்.பி. ஆறுதல்

போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாா் வீட்டில் அவரது உருவப்படத்துக்கு சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்துக்க... மேலும் பார்க்க