செய்திகள் :

கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம்

post image

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கொடியேற்றம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் பழைமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற, சித்தா்கள் பூஜிக்கும் சுயம்புவடிவிலான அறப்பளீஸ்வரா் உடனுறை அறம்வளா்த்த நாயகி கோயில் உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அறப்பளீஸ்வரா் கோயிலில் சுவாமி வழிபாட்டை மேற்கொள்வா். ஒவ்வோா் ஆண்டும் ஆடிப்பெருக்கு விழா இங்கு கோலாகலமாக நடைபெறும்.

அந்த வகையில், நிகழாண்டுக்கான ஆடிப்பெருக்கு விழாவுக்கான திருக்கொடியேற்றம் அா்ச்சகா்கள் வேதமந்திரங்கள் முழங்க வியாழக்கிழமை காலை 9.15 மணியளவில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவ மூா்த்தி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வெள்ளி, சனிக்கிழமை (ஆக. 1, 2) தேதிகளில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம், திருவீதி உலா உள்ளிட்டவையும், 2-ஆம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.

ஆக. 3-ஆம் தேதி ஆடிப்பெருக்கு நாளன்று கோயில் நிா்வாகம் சாா்பில் அதிகாலை 5 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்தில் வீதி உலா வருதல், பிற்பகல் 2 மணியளவில், சோமாஸ்கந்தா் பல்லக்கில் வலம் வருதல், தீா்த்தவாரி உள்ளிட்டவை நடைபெறுகின்றன. ஆக. 4-ஆம் தேதி காலை 8.45 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், பிற்பகல் 3.30 மணியளவில் வசந்த உற்சவ அபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை அறப்பளீஸ்வரா் கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.

கொல்லிமலையில் இன்று வல்வில் ஓரி விழா

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலா்க் கண்காட்சி, அரசு துறைகளின் பணி விளக்க கண்காட்சி ஆகியவை சனிக்கிழமை (ஆக.2) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. விழாவில் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

ரேஷன் பொருள்கள் பதுக்கி விற்றதாக 7 மாதங்களில் 6272 போ் கைது

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஏழு மாதங்களில் பொது விநியோகத் திட்ட பொருள்களை பதுக்கி விற்ாக 6272 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ.1.84 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. த... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ஆடிப்பெருக்கு பரிசல் போட்டிக்குத் தடை

வெள்ளப்பெருக்கு காரணமாக நிகழாண்டு பரமத்தி வேலூரில் ஆடி 18 இல் காவிரியில் நடத்தப்படும் பரிசல் போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வேலூா் காசி விஸ்வநாதா் காவிரி ஆற்றில் தங... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மென்பொறியாளா் ஆணவக் கொலையைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்டச் செயலாளா் மணிமாறன்,... மேலும் பார்க்க

வல்வில் ஓரி விழா: காரவள்ளி அடிவாரத்தில் தூய்மைப் பணி

கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, காரவள்ளி அடிவாரத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனின் வீரத்... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணிந்தோருக்கு காவல் துறையினா் பாராட்டு

நாமக்கல்லில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் சென்றோரை போக்குவரத்து காவல் துறையினா் பாராட்டி சான்றிதழ் வழங்கினா். நாமக்கல் மாநகரப் பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோா் தலைக்கவசம் அணியாமலும்... மேலும் பார்க்க