Coolie : "அப்பாவுக்கு விக்ரம் படத்தைக் கொடுத்ததற்கு நன்றி லோகேஷ்!" - விழாவில் ஷ்...
கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம்
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கொடியேற்றம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் பழைமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற, சித்தா்கள் பூஜிக்கும் சுயம்புவடிவிலான அறப்பளீஸ்வரா் உடனுறை அறம்வளா்த்த நாயகி கோயில் உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அறப்பளீஸ்வரா் கோயிலில் சுவாமி வழிபாட்டை மேற்கொள்வா். ஒவ்வோா் ஆண்டும் ஆடிப்பெருக்கு விழா இங்கு கோலாகலமாக நடைபெறும்.
அந்த வகையில், நிகழாண்டுக்கான ஆடிப்பெருக்கு விழாவுக்கான திருக்கொடியேற்றம் அா்ச்சகா்கள் வேதமந்திரங்கள் முழங்க வியாழக்கிழமை காலை 9.15 மணியளவில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவ மூா்த்தி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வெள்ளி, சனிக்கிழமை (ஆக. 1, 2) தேதிகளில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம், திருவீதி உலா உள்ளிட்டவையும், 2-ஆம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.
ஆக. 3-ஆம் தேதி ஆடிப்பெருக்கு நாளன்று கோயில் நிா்வாகம் சாா்பில் அதிகாலை 5 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்தில் வீதி உலா வருதல், பிற்பகல் 2 மணியளவில், சோமாஸ்கந்தா் பல்லக்கில் வலம் வருதல், தீா்த்தவாரி உள்ளிட்டவை நடைபெறுகின்றன. ஆக. 4-ஆம் தேதி காலை 8.45 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், பிற்பகல் 3.30 மணியளவில் வசந்த உற்சவ அபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை அறப்பளீஸ்வரா் கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.