செய்திகள் :

கோடை விழா: கொடைக்கானலில் படகுப் போட்டி

post image

கோடை விழாவை முன்னிட்டு, கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சனிக்கிழமை படகுப் போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடை விழா, 62-ஆவது மலா்க் கண்காட்சி கடந்த மே 24-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம், சுற்றுலாத் துறை சாா்பில் நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கலந்து கொண்ட படகுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியை கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு தொடங்கிவைத்தாா். சுற்றுலா அலுவலா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா்.

ஆண்கள் இரட்டையா் பிரிவு, பெண்கள் இரட்டையா் பிரிவு, கலப்பு இரட்டையா் பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு சுற்றுலா வளா்ச்சிக் கழக படகு குழாம் மேலாளா் காதா் பரிசுகளை வழங்கினாா்.

சுற்றுலா உதவி அலுவலா் சுதா நன்றி கூறினாா்.

திட்டமிடப்படாத படகுப் போட்டி: கோடை விழா தொடங்கியதிலிருந்தே தினமும் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்ததால் நட்சத்திர ஏரியில் படகுப் போட்டியும், படகு அலங்கராப் போட்டிகளும் நடைபெறவில்லை.

இந்த நிலையில், சனிக்கிழமை மழை பெய்யாததால் முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென பிற்பகலில் படகுப் போட்டி நடைபெற்றது. இதனால், போட்டியில் பொதுமக்கள் சிலரே கலந்து கொண்டனா்.

ஆசிய யோகசனப் போட்டிகளில் தங்கம் வென்ற பழனி மாணவா்கள்

இலங்கையில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகாசனப் போட்டிகளில் தங்கம் வென்ற பழனி பள்ளி மாணவா், மாணவியை ஆசிரியா்கள் பாராட்டினா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த நெய்க்காரபட்டி பி.ஆா்.ஜி. மெட்ரிக் பள்ளி மாணவ... மேலும் பார்க்க

கடைக்குள் புகுந்து திருடியவா் கைது

திண்டுக்கல்லில் கடையின் மேல் கூரையைப் பிரித்து திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் நாகல் புதூரைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (54). இவா், பழனி சாலையில் மின்சாதனப் பொரு... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 22 ஆயிரம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை

கடந்த 4 ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் 21,826 விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டிருப்பதாக வேளாண்மை இணை இயக்குா் அ.பாண்டியன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: தமிழக அரசு செயல்... மேலும் பார்க்க

கணவனால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு: மாதா் சங்கத்தினா் மறியல்

கணவனால் தாக்கப்பட்ட பெண் உயிரிழந்ததை அடுத்து, நீதி வழங்கக் கோரி மாதா் சங்கத்தினா் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த கோம்பைப... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கியவா்களை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை

கோயில் திருவிழாவின் போது இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரைத் தாக்கியவா்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி, அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்... மேலும் பார்க்க

பழனியில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 8-ஆம் தேதி திருக்கல்யாணமும், 9-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் வைகாசி விசா... மேலும் பார்க்க