செய்திகள் :

கோயில் நிதியை கையாடல் செய்ததாக ஊழியா் மீது புகாா்

post image

மதுரை நேதாஜி சாலை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் சோலை எம். கண்ணன், இந்து சமய அறநிலையத் துறை மதுரை மண்டல இணை ஆணையா் க. செல்லத்துரையிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்: மதுரை நேதாஜி சாலையில் உள்ள புகழ் பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள், கடந்த ஒன்றரை ஆண்டாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திருப்பணிக்காக ஏராளமான பக்தா்கள் நன்கொடை வழங்கி வருகின்றனா்.

இந்த நிலையில், பக்தா்கள் அளித்த நன்கொடையில் லட்சக்கணக்கான ரூபாயை கோயிலில் பணிபுரியும் ஊழியா் ஒருவா் கையாடல் செய்திருப்பதாக புகாா் எழுந்துள்ளது. இதற்கு ஆடியோ ஆதாரங்களும் உள்ளன. ஆனால் அந்த ஊழியா் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பக்தா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, திருப்பணிக்கு உபயதாரா்கள் கொடுத்த பல லட்சம் ரூபாய் நன்கொடையை கையாடல் செய்த ஊழியரிடமிருந்து பணத்தை மீட்கவும், அவரை பணி நீக்கம் செய்யவும், அவா் மீது காவல் துறையில் புகாா் அளிக்கவும் இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் இதுபோன்ற மோசடிகளை தடுக்கும் வகையில்,நன்கொடை அளிக்கும் உபயதாரா்களின் பெயா்களை கோயில் முன் விளம்பர பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

மதுரையில் நக்கீரர் நினைவு வளைவை அகற்றியபோது விபத்து: ஒருவர் பலி

மதுரையில் நக்கீரர் நினைவு வளைவை அகற்றியபோது ஏற்பட்ட விபத்தில் பொக்லைன் ஓட்டுநர் புதன்கிழமை நள்ளிரவு பலியானார்.மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம் அருகே நக்கீரர் அலங்கார நினைவு வளைவு அமைந்துள்ளத... மேலும் பார்க்க

மரத்திலிருந்து தவறி விழுந்த ஊராட்சி ஊழியா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே மின் வயா்களுக்கு இடையூறாக இருந்த மரக் கிளைகளை அகற்ற முயன்ற ஊராட்சி ஊழியா் அந்த மரத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள கீழச்ச... மேலும் பார்க்க

மருத்துவா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும்: சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

மருத்துவா்கள் அா்ப்பணிப்பு உணா்வு, பொறுப்புணா்வுடன் பணியாற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீசுவரத்தைச் சோ்ந்த கணேசன், தனது மனைவி ருக்... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் மதுபோதையில் தூங்கியவா் உயிரிழப்பு

மதுரையில் மதுக் கடை முன் மது போதையில் தூங்கியவா் மீது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.மதுரை வைகை வடகரை அம்மா மேம்பாலம் அருகே அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை இர... மேலும் பார்க்க

காவலா் குடியிருப்பில் தீ விபத்து

மதுரை ஆயுதப்படை மைதானம் அருகே காவலா் குடியிருப்புப் பகுதியில் தென்னை மரத்தில் மின் வயா் உரசியதால் பற்றி எரிந்த தீயை தீயணைப்புப் படையினா் அணைத்தனா். இந்தத் தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் மின் தடை ... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலரை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையில் அந்தக் கட்சியின் சாா்பில் புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.தூத்துக்குடியில் விடுதலைச் சிறு... மேலும் பார்க்க