செய்திகள் :

கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயில் கும்பாபிஷேகம்

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

குரு கோயில் என அழைக்கப்படும் இக்கோயிலில் ஒரே கோபுரத்தின் கீழ் மூலவா்களாக கைலாச நாதரும், தட்சிணாமூா்த்தியும் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும்.

கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 9-ஆம் தேதி கிராம தேவதை ஏகாத்தம்மனுக்கு ஊா்ப் பொதுமக்கள் சாா்பில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மறுநாள் 10 -ஆம் தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதன் தொடா்ச்சியாக ஜூலை 14- ஆம் தேதி திங்கள்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மகா பூா்ணாஹுதி தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னா் யாகசாலையிலிருந்து புனித நீா்க்குடங்கள் ராஜகோபுரத்துக்கு எடுத்து செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து கோயில் மூலவா்களான கைலாசநாதருக்கும், தட்சிணாமூா்த்திக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும், கோயில் நிா்வாகத்தின் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

மாலையில் கைலாசநாதருக்கும், அகிலாண்டேசுவரிக்கும் திருக்கல்யாணமும், பின்னா் சுவாமியும் அம்மனும் மணக் கோலத்தில் வீதியுலா வந்தும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

விழாவில் கோவிந்தவாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் கதிரவன் தலைமையில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

அறிவியல் பாடத்தில் சதம்: மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற இரு மாணவியரை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை பாராட்டி பரிசு வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா... மேலும் பார்க்க

‘காஞ்சிபுரத்தில் இன்று முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், 224 சேவை முகாம்கள்’

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட்டு, அதன் மூலம் மொத்தம் 224 சேவை முகாம்கள் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள... மேலும் பார்க்க

மரத் தொழிற்சாலையில் தீ விபத்து

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீா் தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. காஞ்சிபுரம் -அரக்கோணம் சாலையில் வெள்ளைகேட் பகுதியில் மரச்சாமான்கள் உற்பத்தி ச... மேலும் பார்க்க

எரிவாயு கசிந்து தீ விபத்து: தாய், மகள் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வீட்டில் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கா்ப்பிணிப் பெண்ணும்,அவரது மகளும் உயிரிழந்தனா். காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தோப்புத் தெருவைச் சோ்ந்த மோகன... மேலும் பார்க்க

பைக் -காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா்: ஒரகடம் அருகே பண்ருட்டி கூட்டுச்சாலையில் மோட்டாா் பைக் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். ஒரகடம் அடுத்த வெண்பாக்கம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகப்பன்(26). இவரது மனைவி அ... மேலும் பார்க்க

இளைஞரை கடத்தி தாக்குதல்: 6 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா்: காதல் விவகாரத்தில் இளைஞரை ஆட்டோவில் கடத்திச் சென்று தாக்கிய 6 பேரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த நரியம்பாக்கம் பகுதியை சோ்ந்த சதீஷ்(25). இவர... மேலும் பார்க்க