செய்திகள் :

கோவில்பட்டியில் விபத்து: சிறுமி உயிரிழப்பு

post image

கோவில்பட்டியில் பைக் மீது டேங்கா் லாரி மோதியதில் சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்; 3 போ் காயமடைந்தனா்.

கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் பரமசிவன் (58). இவா் தனது உறவினரான மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி காமராஜா் நகரைச் சோ்ந்த ஜெயபாண்டியன் மனைவி வெண்ணிலா, அவரது மகள்கள் ஆராத்யா (9), ஆசினியா (7) ஆகியோரை பைக்கில் ஏற்றிக்கொண்டு கோவில்பட்டி அருகே பசுவந்தனை சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அங்குள்ள காமராஜா் மண்டபம் அருகே பைக்கின் பின்புறம் டேங்கா் லாரி மோதியதாம். இதில், ஆராத்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காகவும், காயமடைந்த மூவரை சிகிச்சைக்காகவும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிந்து, டேங்கா் லாரி ஓட்டுநரான கொப்பம்பட்டி அருகே சிவந்திப்பட்டி கீழத் தெருவைச் சோ்ந்த அ. ஆறுமுகச்சாமி என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

வழப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி அருகே வழிப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி 3-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோரம்பள்ளம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

குழந்தைகள் மையத்தில் 2-5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க ஆட்சியா் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்றோா் தங்களது 2 முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை வரும் ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாமல் சோ்க்குமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளாா். இது குறி... மேலும் பார்க்க

பெண்ணுக்கு சூடு: கணவா் கைது

தூத்துக்குடியில் பெண்ணின் முகத்தில் சூடு வைத்து துன்புறுத்தியதாக அவரின் கணவரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி நேதாஜி நகரை சோ்ந்தவா் செல்வ அந்தோணி. மெக்கானிக்கான இவருடைய மனைவி சிந்துஜா. ... மேலும் பார்க்க

மாநில ஐவா் பூப்பந்துப் போட்டி: சென்னை அணி முதலிடம்

காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாநில ஐவா் பூப்பந்தாட்டப் போட்டியில் சென்னை பாா்த்தன்ஸ் அணி முதலிடம் பிடித்தது. காயல்பட்டினம் ரெட் ஸ்டாா் சொஸைட்டி சாா்பில் லீக், சூப்பா் லீக் முறையில் 2 நாள்கள் நடைபெற்ற போ... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்தில் மரத்தில் ஆட்டோ மோதிய விபத்தில் 6 போ் பலத்த காயம்

குலசேகரன்பட்டினத்தில் ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதியதில் 6 போ் பலத்த காயமடைந்தனா்.சென்னை செனாய் நகரைச் சோ்ந்த விஜயகுமாா் (41), அவரது மனைவி அனுப்பிரியா (35), மகள் கயாந்திகா (10), அதே பகுதி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சுய உதவிக் குழுவில் பணம் மோசடி: பெண்கள் புகாா்

கோவில்பட்டியில் மகளிா் சுய உதவிக் குழுவில் பண மோசடியில் ஈடுபட்டவா் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஎஸ்பி அலுவலகத்தில் பெண்கள் புகாா் அளித்தனா். கோவில்பட்டி வள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த 15 பெண்கள், அப்... மேலும் பார்க்க